முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை பல்கலை துணைவேந்தர் முதல்வருக்கு நன்றி

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஏப். 10 - மதுரை காமராசர் பல்கலைக் கழகத்துக்கு துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியை கல்யாணி மதிவாணன் வரும் 11 ம் தேதி பொறுப்பேற்கிறார். சென்னை எத்திராஜ் கல்லூரிஈயில் ஆங்கிலத் துறை தலைவராக பணியாற்றிய அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்ற இவர், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் வரும் 11 ம் தேதி பொறுப்பேற்கவுள்ளதாக பல்கலைக் கழக அதிகாரிகள் கூறினர்.

புதிய துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

என்னை இந்த பொறுப்புக்கு நியமித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது தந்தை இதே பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி உள்ளார். இந்த பல்கலைக் கழக வளர்ச்சிக்கு என்னால் முடிந்த பணிகளை செய்வேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்