எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.11 - வீட்டுவசதி வாரிய நிலத்தை அபகரித்த முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தம்பி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வைத்தியலிங்கம் கூறினார். நேற்று சட்டப்பேரவையில் வீட்டுவசதி வாரிய மானியக் கோரிக்கை மீதான கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் வைத்தியலிங்கம் பேசியதாவது:- வீட்டுவசடி வாரிய பொன் விழா ஆண்டில் முதல்வர் ஜெயலலிதா மாற்று திறனாளிகள் நலன் காக்கும் விதமாக வீட்டுவசதி வாரிய வீடுகள், மனைகள் ஒதுக்குவதில் 3 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கி ஆணையிட்டுள்ளார். மேலும் பொன் விழா ஆண்டை முன்னிட்டு வாரியத்தின் அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் சிறப்பு கருணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. வாரிய ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு 91 தொழில்நுட்ப பணியாளர்களுக்கும், 175 தொழில்நுட்பம் சாரா பணியாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ரூ.34 கோடி செலவில் பழுதடைந்த வாரிய குடியிருப்புகளை புதுப்பித்து புனரமைக்கப்பட்டும் வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை வாரியத்திற்கு சொந்தமான வாடகை குடியிருப்புகளை அரசு ஊழியர்களுக்கு மட்டுமே என்பதை மாற்றி அரசு சாரா ஊழியர்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர்கள், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் ஊழியர்கள், மின்சார வாரியம் மற்றும் குடிநீர் வாரிய பணியாளர்களுக்கும் முதல்வரின் ஆணைக்கிணங்க ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த 10 மாத கால ஆட்சியில் சென்னையில் மட்டும் ரூ.111 கோடி மதிப்புள்ள 6 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வாரியம் வசம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் ஒரு செண்ட் நிலம் கூட மீட்கப்படவில்லை. ஏனென்றால் இந்த ஆக்கிரமிப்பில் இருந்தவர்கள் தி.மு.க.வினர் அவரிகள் முதல்வரின் ஆணைக்கிணங்க மேலும் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தி.மு.க ஆட்சிக்கு வரும்போது எல்லாம் வீட்டு வசதி வாரியம் ``கோபாலபுரம் வீட்டுவசதி வாரியமாக மாறிவிடும்''
நந்தனம், லோட்டஸ் காலனி, 3,481 சதுர அடி நிலத்தில் 666 சதுர அடி வீட்டை 12.2.2012 அன்று விற்பனை செய்து விற்பனை பத்திரம் வழங்கியுள்ளனர். இதன் மதிப்பு 5 கோடி ரூபாய். ரூ.1,48,70,200/-யினை ஒரே தவணையில் செலுத்தியுள்ளார். இது 1961- சிட்டி இம்ப்ருமெண்ட் டிரஸ்ட் டால் கட்டப்பட்ட தனி வீடு. சட்டப்படி அரசு விருப்புரிமையே கிடையாது. சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த விற்பனையினை ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தி.மு.க. இலக்கிய அணிச் செயலாளர் ஏ.எல். ஆறுமுகம் மற்றும் அவரது மகன் ஏ.மகேஷ் ஆகிய இருவரும் வாரியத்திற்கு சொந்தமான 0.84 ஏக்கர்(16 கிரவுண்ட்) நிலத்தினை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதன் மொத்த மதிப்பு ரூ.17 கோடிக்கு மேல் இருக்கும். இவர்கள் மீது நில அபகரிப்பு வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
2008-ம் ஆண்டில், உயர் வருவாய் பிரிவு மனை எண்.1023,1024, 1025 ஆகியவற்றை அரசு விருப்புரிமையின் கீழ் முன்னாள் முதலமைச்சரின் பாதுகாவலர்களாக பணியாற்றிய சி. கணேசன், சி.வினோதகன் மற்றும் இன்னொரு பாதுகாவலர் பாண்டியனின் மனைவி மீனா என்பவர்களது பெயரில் முறையே 4438 சதுர அடி, 4500 சதுர அடி, 4438 சதுர அடி மனைகள் முறையே ரூ.74,52,100/-ரூ.74, 13,100/-ரூ.75,28,500/- தொகைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூவரும் மனைக்கான தொகையை ஒரே நாளில் செலுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் விற்பனை பத்திரம் பெற்ற 18 நாட்களிலேயே வியாபார நோக்கில் வேறு நபர்களுக்கு விற்பனை செய்துவிட்டனர்.
இதே போன்று காட்பாடி நகரமைப்பு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமாக வணிக நோக்கத்திற்காக உள்ள இடங்களை 34, 800 சதுரஅடி உள்ள காலி இடத்தினை 13.12.2007 அன்று நடத்தப்பட்ட ஏலத்தில் அமைச்சர் துரைமுருகன் மனைவி சாந்தகுமாரி பெயரில் 4,800 சதுரடிகள் அவரது மகன் கதிரானந்தன் பெயரில் 5,400 சதுரடியும் ஆக மொத்தம் 15,600 சதுரடியை ரூ.78.78 இலட்சத்திற்கு ஏலம் எடுத்தனர்.2008-ம் ஆண்டில் குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து விட்டோம் என்று நினைத்து எதிர்காலத்தில் நடவடிக்கை வரும் என்று பயந்து சங்கத்திற்கு திருப்ப ஒப்படைப்பு செய்தனர். அப்போதே துரைமுருகன் தி.மு.க. ஆட்சி போய்விடுமோ என்றும் ஜெயலலிதா ஆட்சி வந்துவிடும் என்று உறுப்பினர் துரைமுருகனுக்கு முன்பே தெரிந்திருக்கும் போல் உள்ளது. இதேபோல் 24.1.2007 மற்றும் 13.2.2007 ஆகிய நாட்களில் நடத்தப்பட்ட ஏலத்தில் வணிக நோக்கத்திற்குண்டான இடத்தை முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் தம்பி துரைசிங்காரம் மற்றும் அவரது துணைவியார் முல்லைகொடி துரைசிங்காரம் ஆகியோர் 22,000 சதுர அடியை ரூ.114.06 இலட்சத்திற்கு ஏலம் எடுத்திருக்கிறார்கள். இதேபோன்று மேற்படி காலி மனைகளை முறைகேடாக விற்பனை செய்தது குறித்து சட்டப்பிரிவு 81-கீழ் விசாரணைக்கு ஆணையிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் முறைகேடாக பெற்ற இடத்தை விசாரணைக்கு பயந்து ஒப்படைத்துவிட்டார். ஆனால் அவரது சகோதரரோ இதுவரை ஒப்படிக்கவில்லை. இது குறித்து விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். முறையே 6,000 சதுரடி மற்றும் 16.000 சதுரடி நிலத்தினை ரூ.28.26 இலட்சம் மற்றும் ரூ.85.80 இலட்சத்திற்கு யாரையும் ஏலம் கேட்கவிடாமல் மிக குறைந்த விலைக்கு ஏலம் எடுத்துள்ளார்கள்.
பின்னர் நடவடிக்கைக்கு பயந்து ஏலம் எடுத்த நிலத்தை சங்கத்திற்கு திரும்ப ஒப்படைக்கிறேன் என்று சொன்னவர்கள் திரும்ப நிலத்தை ஒப்படைப்பு செய்யவில்லை. கோயம்புத்தூர் மண்டலத்தில் பிஎஸ்ஜி கூட்டுறவு வீடுகட்டும் சங்கம், குறிச்சி கூட்டுறவு வீட்டுவசதி சங்கம், சக்தி கூட்டுறவு வீட்டுவசதி சங்கம், கோத்தாரிமில் கூட்டுறவு சங்கம் போன்றவற்றில் நடைமுறைப்படுத்தாத வீட்டுமனை திட்டங்களை முன்பணம் என்ற பெயரில் தி.மு.க- வை சேர்ந்த எம்.பழனிச்சாமி எம்.என்.சுகுமார் மற்றும் சிலர் ரூ.8 கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து சட்டப்பிரிவு 81- ன் கீழ் விசாரணைக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா அரசு பொறுப்பேற்றவுடன் திட்ட அனுமதி வழங்குதல் பல்வேறு சீரிதிருத்தங்களை அமலாக்கியுள்ளது. முதலில், அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை வகைப்படுத்தி, அலுவலகச் செயல்முறை ஆணை வெளியிட்டு அது அனைவரும் அறியும் வகையில், இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. மிகப்பெரிய மாற்றமாக, திட்ட அனுமதியில் இரட்டை அடுக்குமுறை புகுத்தப்பட்டு, மனை ஒப்புதல், கட்டிட ஒப்புதல் என்று பிரிக்கப்பட்டு, விரைவாக திட்ட அனுமதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 வருடங்களுக்கு முன்னரே செயல்படுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை தற்போது முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க 3.2.2012 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது இவ்வாறு அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.