முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் நான்கு முறை நிலஅதிர்வு - மக்கள் ஓட்டம்

வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.12 - சென்னையில் நேற்று பிற்பகல் 2.10 மணியளவில் திடீர் நிலஅதிர்வு ஏற்பட்டது. இதன் பின் மூன்று முறை தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலஅதிர்வு 6.5 எனப் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அலுவலகங்கள், வீடுகளில் இருந்தவர்கள் பீதியில் ஓட்டம் பிடித்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் பீதி அடைந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி விரைந்தனர். பல்வேறு கட்டடங்கள், அலுவலகங்களில் உள்ளவர்கள் தங்கள் கட்டடங்களில் இருந்து வெளியேறி வீதியில் பாதுகாப்பாக நின்றனர்.

இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 2.15 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. குறிப்பாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, திருவாரூர், மலைப்பிரதேசமான ஊட்டி உள்ளிட்டபெரும்பாலான இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. சென்னையில் சேத்துபட்டு, எழும்ர், நுங்கம்பாக்கம், மயிலாப்ர், மந்தைவெளி, ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை , அமிஞ்சிக்கரை, அண்ணா நகர், ந்தமல்லி, போரூர்,  அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தை உணர்ந்து அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சென்னை முகப்பேர் கிழக்கு, மேற்கு பகுதிகளில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் நிலநடுக்கத்தால் புறநகர் பகுதியான மீஞ்சூரில் நிலநடுக்கம் உணரப்பட்டது. வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கெண்டு தெருக்களுக்கு ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சென்னையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை

பள்ளிகளுக்கு விடுமுறை- துறைமுகப் பணி நிறுத்தம்:

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உணரப்பட்ட நில அதிர்வைத் தொடர்ந்து சென்னையில் பள்ளிகளுக்கு உடனடியாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், உயர் நீதிமன்றத்தில் நில அதிர்வு உணரப்பட்டதும் நீதிமன்றப் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

பல தனியார் நிறுவன ஊழியர்களும், கட்டடங்களை விட்டு வெளியேறி திறந்த வெளியில் பாதுகாப்பாக நின்றனர்.

இந்த நிலையில் கடலோரப் பகுதிகளில் அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் வேலை பார்ப்போர், பல்வேறு பணிகளுக்காக நகருக்குள் வந்தவர்கள் அவசரம் அவசரமாக வீடு திரும்பினர். இதனால் ரயில் நிலையங்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் படையெடுத்ததால் ரயில் நிலையங்களில் பெரும் கூட்டம்  கூடியது. சென்னையில் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து கிளம்ப வேண்டிய மின்சார ரயில்கள் தாமதமாகின. இதனால் ரயில் நிலையங்களில் பெரும் கூட்டம் காணப்பட்டது. மக்களும் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

சென்னை துறைமுகத்திலும் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, துறைமுகத்தில் உள்ள கப்பல்களை நடுக்கடலில் கொண்டு சென்று நிலைநிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மீண்டும் நில அதிர்வுகள் உணரப்பட்டது மதியம் 2.10 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் மாலை 4.20 மணிக்கும் லேசான பின்னதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. மெரினாவில் 4.45 மணிக்கு சுனாமி தாக்கலாம் என்ற செய்தியைத் தொடர்ந்து மீண்டும் பின்னதிர்வுகள் ஏற்பட்டது பொதுமக்களை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தியது.

செல்போன் சேவை பாதிப்பு:

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சென்னை நகர் முழுவதும் செல்போன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் சென்னையில் பதற்றம் எழுந்தது. சுனாமி எச்சரிக்கை இந்தோனேசியாவில் அசே பகுதியில்  மிக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 8.9 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் காரணமாக இந்தியா உள்பட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால். பிற்பகல் 2.30 க்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்புக்கு காவலர்கள் குவிக்கப்பட்டனர். இதன் பின் மேலும் இரண்டு முறை என்று நான்கு முறை நிலம் அதிர்ந்தது.

அவர்கள் மக்களை வெளியேற்றினர். மதியம் 3 மணிக்கு எல்லாம் கடற்கரை வெறிச்சோடியது. கூடுதல் போலீஸ் படையும் குவிக்கப்பட்டு. மதியம் 2 வது நில அதிர்வு ஏற்பட்டதும். எண்ணூர், மெரினா, பட்டிணப்பாக்கம் போன்ற கடலோரப் பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. ஆங்காங்கு மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். 

சென்னையில் சுனாமி பீதி ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்று  வானிலை மையம் அறிவித்தது. அதுபோல ஐதராபாத்தில் உள்ள தேசிய பேரிடர் மையமும் சுனாமி முதலில் எச்சரிக்கை விட்டு பின் அதன் அபாயம் இலகிய பின் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago