முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூங்காக்களில் மாற்றம் ஏதும் செய்யக் கூடாது! மாயாவதி

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

லக்னோ, ஏப். - 16 - உத்தர பிரதேசத்தில் கடந்த ஆட்சியின் போது அமைக்கப்பட்ட சிலைகள் மற்றும் பூங்காக்களில் எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது என்று ஆளும் சமாஜ்வாடி கட்சிக்கு மாயாவதி எச்சரிக்கை விடுத்துள்ளார். எங்கள் ஆட்சியின் போது நிறுவப்பட்ட சிலைகளை இப்போதைய அரசு அகற்ற முயன்றால் மாநிலத்திலும் நாட்டிலும் சட்டம் ஒழுங்கு கெட்டு போய் விடும். சமாஜ்வாடி கட்சியினர் எங்களை பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள் ஆட்சி செய்த போது முலாயம்சிங் ஆட்சியில் நிறுவப்பட்ட சிலைகளை நாங்கள் எதுவும் செய்யவில்லை. அதேபோல் அவர்களும் இப்போது நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்