முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவை வரும் சட்டசபை தேர்தலோடு ஒப்பிடமுடியாது

வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஏப்.- 19 - டெல்லி மாநகராட்சி தேர்தலை வரும் சட்டசபை தேர்தலோடு ஒப்பிட  முடியாது என்று டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் கருத்து தெரிவித்துள்ளார். நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் எதிர்பாராதவிதமாக படுதோல்வி அடைந்தது. அதனையடுத்து டெல்லி மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் கிழக்கு வடக்கு தெற்கு டெல்லி மாநகராட்சி தேர்தலில் கிழக்கு மற்றும் வடக்கு மாநகராட்சி தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது. தெற்கு மாநகராட்சி தேர்தலிலும் அதிக இடங்களில் பாரதிய ஜனதா வெற்றிபெற்றுள்ளது. காங்கிரசுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து தோல்வியை காங்கிரஸ் சந்தித்து வருவதால் மக்கள் செல்வாக்கை இழந்திருப்பது தெளிவாக தெரிகிறது. அதனால் அடுத்து நடக்கவிருக்கும் டெல்லி சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடையலாம் என்று கருத்து நிலவுகிறது.  இந்தநிலையில் டெல்லி காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்ஷித் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவை வரும் இதர தேர்தகளோடு ஒப்பிட முடியாது. தற்போது டெல்லி மாநகராட்சி தேர்தல்தான் நடந்துள்ளது. இதற்கும் சட்டசபை தேர்தலுக்கும் வித்தியாசம் உள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும். தற்போது ஏதாவது தவறு நடந்திருந்தால் அதை திருத்திக்கொண்டு வரும் சட்டசபை தேர்தலில் நாங்கள் வெற்றிபெறுவோம் என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்