எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை, ஏப் - 21 - நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் தொடர்ந்தாலும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை காரணமாக, அணுமின் நிலையத்தில் மீண்டும் பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அணுமின் நிலையத்தில் எத்தனை நாட்களில் மின்சார உற்பத்தியை தொடங்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்வதற்கும், விஞ்ஞானிகளுடன் அதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்கும் நேற்று முன்தினம் இந்திய அணு மின்சார கழக தலைவர் எஸ்.கே.ஜெயின் கூடங்குளம் வந்தார். அவருடன் ரஷிய நாட்டைச் சேர்ந்த அணு உலை கட்டுமானம், கட்டமைப்பு நிறுவன தலைவர் லிமரன்கோ வலேரி மற்றும் ரஷிய உயர் விஞ்ஞானிகள் சிலரும் வந்து இருந்தனர்.நேற்று முன்தினம் அவர்கள் ஆய்வு செய்து முதல் அணு உலையில், மின் உற்பத்தி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே ராதாபுரம் தாலுகாவில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளின் தலைவர்கள் ஒரு கோரிக்கை மனுவை அணு மின்சார கழக தலைவர் எஸ்.கே.ஜெயினிடம் அளித்தார்கள். அதில் உள்ள கோரிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
விஞ்ஞானிகளுடன் எஸ்.கே.ஜெயின் நேற்று 2-வது நாளாக ஆலோசனை நடத்தினார். பின்னர் மாலை 5 மணி அளவில் அணுமின் நிலையத்தில் உள்ள கூட்ட அரங்கில் நிருபர்களுக்கு, ரஷிய விஞ்ஞானிகளுடன் கூட்டாக பேட்டி அளித்தார். பேட்டியின் போது எஸ்.கே.ஜெயின் கூறியதாவது: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மீண்டும் பணிகளை தொடங்குவதற்கு தக்க நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜப்பான் நாட்டில் புகுசிமா அணுஉலை விபத்து காரணமாக கூடங்குளம் பகுதி மக்கள் அச்சமடைந்து திடீர் போராட்டத்தை தொடங்கினர். அந்த போராட்டத்துக்கு முன்பே மாதிரி எரிபொருளை நிரப்பி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வெப்பநீர் பரிசோதனை ஓட்டம் நடத்தி இருந்தோம்.
இந்த நிலையில், கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டம் காரணமாக 6 மாதங்களாக பணிகள் ஏதும் நடைபெறாமல் அணு உலை முடங்கிக் கிடந்தது. அரசு எடுத்த நடவடிக்கைக்கு பின்னர் மீண்டும் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த காலதாமதத்தால் அணு உலையில் உள்ள அனைத்து கருவிகளும் முன்புபோல் சரியாக வேலை செய்கிறதா? என்பதை மறுபரிசோதனை செய்து பார்த்தோம். இந்த சோதனையும் 95 சதவீதம் வரை முடிந்துவிட்டது.
அடுத்தக்கட்டமாக கோர் கூலிங் சிஸ்டம் என்ற பரிசோதனையை மேற்கொள்ள உள்ளோம். இதனை ஒருங்கிணைந்த அணு உலை குளிரூட்டும் சோதனை என்று கூறுவார்கள். ஒரு வாரத்தில் இந்த சோதனையை நடத்த இருக்கிறோம். அதன் பிறகு, இந்திய அணு மின்சார ஒழுங்குமுறை வாரியத்துக்கு அறிக்கை அனுப்புவோம். ஏற்கனவே வெப்பநீர் சோதனை குறித்தும் அறிக்கை அனுப்பி இருக்கிறோம்.
இந்த அறிக்கைகளின்படி அணுமின்சார ஒழுங்குமுறை வாரியம் முறையான ஒப்புதலை அளிக்கும். அதன் பின்னர் அணு உலையில் நிரப்பப்பட்டு இருக்கும் மாதிரி எரிபொருளை அகற்றிவிடுவோம். பின்னர் யுரேனியம் எரிபொருளை நிரப்புவோம்.
யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி சுமார் ஒரு மாதம் வரை நடைபெறும். அதன் பிறகு மின் உற்பத்தி தொடங்கப்படும். ஒட்டுமொத்தமாக கணக்கிடும் போது இன்னும் 2 மாதங்களில், அதாவது ஜூன் மாதம் கடைசியில் அல்லது ஜூலை மாதத்தில் மின்சார உற்பத்தி தொடங்கப்படும்.
கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பிலும், இப்பகுதி மக்களின் பாதுகாப்பிலும் நாங்கள் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். நாட்டு மக்களின் நலனில் எங்களுக்கும் அக்கறை இருக்கிறது. கூடங்குளத்தில் சுனாமி, நில அதிர்வு போன்றவை ஏற்பட்டாலும் அணு உலைக்கு எந்த பாதிப்பும் வராது. புகுசிமா அணு உலையைவிட பலமடங்கு நவீன வசதிகளுடன் இந்த அணு உலை உள்ளது.
சமீபத்தில் இந்தோனேசியா கடலில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் நில அதிர்வு இருந்தது. ஆனால், கூடங்குளத்தில் மிகச்சிறிய நில அதிர்வு கூட இல்லை. இதுதான் உண்மை.
கூடங்குளத்தில் 3-வது, 4-வது அணு உலைகளை அமைப்பது பற்றியும் நாங்கள் ஆலோசித்து உள்ளோம். நீரியியல், நிலவியல், கடலியல் குறித்து பல்வேறு உயர்மட்ட நிபுணர்கள் ஆய்வு நடத்திய பின்னர்தான், கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. எனவே அவை பற்றி எந்த சந்தேகமும் அடைய தேவையில்லை.
கூடங்குளம் பகுதி மேம்பாட்டுக்காக ஏற்கனவே அணு மின்சார கழகம் சாலை, குடிநீர் வசதிகளையும், பள்ளிக்கூடத்தை மேம்படுத்துவதற்கும் உதவி செய்து உள்ளது. தற்போது மத்திய, மாநில அரசுகள் சிறப்பு நிதியும் ஒதுக்கீடு செய்து உள்ளன. தகுந்த வளர்ச்சி திட்டங்களுக்காக எங்களிடம் நிதி கேட்டால் இன்னும் கொடுக்க தயாராக இருக்கிறோம்.
மக்களுக்கு விரைவில் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிப்போம். ஒருவேளை விபத்து ஏதும் ஏற்பட்டால் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கேட்கிறீர்கள்? அப்படி ஏதும் ஏற்பட்டால் மாவட்ட கலெக்டருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும். மாவட்ட நிர்வாகம் சார்பில் போர்க்கால நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும். இதற்காக மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறை மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்த குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அணுமின் நிலையத்தில் 6 மாதங்களுக்கு ஒருமுறையும், அணு உலை வளாகத்தில் ஆண்டுக்கு ஒருமுறையும், சுற்றுப்புற கிராமங்களில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அணு மின்சார கழக தலைவர் எஸ்.கே.ஜெயின் கூறினார்.பேட்டியின் போது அணுமின் திட்டங்கள் இயக்குனர் புரோகித், ரஷியாவைச் சேர்ந்த லிமரன்கோ வலேரி, அணுமின் நிலைய இயக்குனர்கள் ஆர்.எஸ்.சுந்தர், பானர்ஜி, நிதி இயக்குனர் பிரேமன் தினராஜ் மற்றும் ரஷிய விஞ்ஞானிகள், அணு மின்சார கழக அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.