எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.- 21 - சென்னையில் பழம் பறிக்க சென்ற சிறுவனை சுட்டுக் கொன்ற வழக்கில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்டனையும், 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை விரைவு nullநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை தீவு திடல்அருகே இந்திரா நகர் குடிசைப் பகுதியைச் சேர்ந்த சிறுவன் தில்சன்(13).கடந்த ஆண்டு ஜூலை 3ஆம் தேதி இவன் அங்குள்ள ராணுவ குடியிருப்பில் பாதாம் கொட்டை பறிக்கச் சென்ற போது, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் தனது வீட்டின் பால்கனியில் இருந்து சிறுவனை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், உறவினர்கள் குற்றவாளியை கைது செய்யக் கோரி மறியலில் ஈடுபட்டனர். இதில் இராணுவ அதிகாரி சம்பந்தப்பட்டு இருப்பதால் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி. சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. சேகர், டி.ஐ.ஜி. ஸ்ரீதர், சூப் பிரண்டுகள் சந்திரபாசு, சோனல் மிஸ்ரா ஆகியோர் கடந்த ஒரு வாரமாக பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திரா நகர் அருகே ராணுவ குடியிருப்பு உள்ளது. போலீஸார் அங்கு சென்று சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுவன் சுடப்பட்டதற்கும், இராணுவ அதிகாரிகளுக்கும் தொடர்பு இல்லை என்று ராணுவ தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் அறிவியல் ரீதியாகவும் 100க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் அடிப்படையிலும் நடத்திய விசாரணையில் சிறுவனை சுட்டது இராணுவ அதிகாரி தான் என்ற முடிவுக்கு வந்தனர். சிறுவனை சுட்ட வீட்டில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் ராமராஜ் பாண்டியன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரிடம் விசாரித்த போது தனக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்தார். தனக்கு சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு இருப்பதாக கூறினார். இதனால் போலீஸார் அவரது செல்போன் நம்பரை மட்டும் வாங்கிக் கொண்டனர். அவரை தகுந்த ஆதாரத்துடன் பிடிக்க திட்டமிட்டனர். அவரது செல்போன் நம்பரை வைத்து சம்பவம் நடந்த அன்று அவர் எங்கு இருந்தார் என்பதை பார்த்தனர். சம்பவம் நடந்த நேரத்தில் அவரது செல்போன் நம்பர் அதே பகுதியை காட்டியது. சம்பவம் நடந்த அன்று இரவில் நேப்பியர் பாலம் வரை சென்றதையும் செல்போன் டவர் காட்டியது. இதனால் ராமராஜ் பாண்டியன் மீது போலீஸுக்கு சந்தேகம் வலுத்தது. அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தங்களிடம் சிக்கிய ஆதாரங்களை காட்டி சரமாரியாக கேள்விகள் கேட்டு விசாரித்தனர். வேறு வழியின்றி தில்சனை சுட்டுக் கொன்றது நான் தான் என்று குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, தில்சனை சுட்டுக் கொன்றதாக முன்னாள் ராணுவ அதிகாரி ராமராஜ் கைது செய்யப்பட்டார். சிறுவனை சுட்டு கொன்றது குறித்து ராமராஜ் பாண்டியனிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. ராணுவத்தில் மெக்கானிக்கல் பிரிவில் என்ஜினீயராக பணிபுரிந்து கடந்த ஏப்ரல் மாதம்தான் ஓய்வு பெற்றார். சொந்த ஊர் மதுரை. இரண்டரை வருடங்களாக தீவுத்திடல் அருகே ராணுவ குடியிருப்பில் வசித்து வந்தார். இராணுவ குடியிருப்பும், சிறுவன் தில்சன் வசித்து வந்த குடிசைப் பகுதியும் அருகருகே உள்ளது. தில்சான் மற்ற சிறுவர்களுடன் இராணுவ மைதானத்துக்கு வந்து விளையாடுவான். மாங்காய் பறிப்பது, பாதாம் கொட்டைக்காக மரத்தில் கல் எறிவது, சுவர் ஏறி குதிப்பது போன்ற செயலில் ஈடுபட்டனர். அவர்கள் போடும் சத்தம் ராமராஜ் பாண்டியனுக்கு இடையூறாக இருந்தது. பகலில் அவரால் தூங்க முடியவில்லை. இந்த வெறுப்பில் சிறுவனை சுட்டதாக ராமராஜ் தெரிவித்துள்ளார். சிறுவனை சுட்டதும் வீட்டில் குளியலறையில் சிறிது நேரம் பதுங்கி இருந்தார். பின்னர் வெளியில் வந்து பார்த்தபோது அங்கு மறியல், அதிகாரிகள் விசாரணை என்று பரபரப்பாக இருந்தது. ராமராஜ் பாண்டியன் ஒன்றும் தெரியாதவர் போல் வந்து அதிகாரிகளிடம் நடித்து விட்டுச் சென்றார். அதன் பிறகு இரவில் காரை எடுத்துக் கொண்டு நேப்பியர் பாலம் சென்று அங்கு கூவத்தில் தனது ரைபிள் துப்பாக்கியையும் துப்பாக்கி குண்டுகளையும் வீசி விட்டு சென்றார்.
தீயணைப்பு அதிகாரி வேலாயுதம் தலைமையில் வீரர்கள் கூவத்தில் படகில் சென்று இறங்கி ராமராஜ் பாண்டியன் வீசிய இடத்தில் துப்பாக்கியை தேடினர். ராம்ராஜ் பாண்டியனையும் உடன் அழைத்துச் சென்றனர். அவர் துப்பாக்கியை வீசிய இடத்தை காட்டினார். அவர் நேப்பியர் பாலத்தில் இருந்து வீசிய வேகத்தில் அது செங்குத்தாக சென்று சகதியில் செருகி இருந்தது. இதனால் துப்பாக்கி தேடிய உடனே எளிதில் கிடைத்து விட்டது. துப்பாக்கி சிக்கியதும் ராமராஜ் பாண்டியன் இப்படி தவறு செய்து விட்டேனே என்று தலையில் அடித்து கதறினார். அது 0.3 எம்.எம். வெளிநாட்டு துப்பாக்கியாகும். ஜலப்nullரில் இருந்தபோது உறவினர் முகவரியை கொடுத்து தன் பெயரில் அந்த துப்பாக்கிக்கான லைசென்சை பெற்று இருப்பதும் தெரிய வந்தது.
பின்னர் கைதான கர்னல் ராமராஜ் பாண்டியன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் விரைவில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன் பின்னர் இந்த வழக்கு சென்னை 5-ம் விரைவு கோர்ட்டுக்கு தில்சான் கொலை வழக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வழக்கின் சாட்சி விசாரணை 5ம் விரைவு கோர்ட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் 20ந் தேதி தொடங்கியது. இந்த வழக்கு சென்னை விரைவு நீnullதிமன்றத்தில் கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி ராதா விசாரித்தார். அரசுத் தரப்பின் முதல் சாட்சியாக தில்சனின் தாயார் சாட்சி அளித்தார். இந்த நிலையில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்து கடந்த 2 வாரமாக வக்கீல் வாதம் நடந்தது. கடந்த 11 ஆம் தேதிதான் வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்படும் என்று நீnullதிபதி ராதா அறிவித்து இருந்தார். சரியாக 11.30 மணி அளவில் புழல் சிறையில் இருந்து ராணுவ அதிகாரி ராமராஜ் போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டு நீnullதிபதி ராதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீnullதிபதி, ராமராஜிடம் தண்டனை பற்றி ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு , இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தார். அப்போது nullநீதிபதி, வழக்கு பற்றி கேட்கவில்லை. கொடுக்க போகும் தண்டனை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று கேட்டார். நான் நிரபராதி என்றார் ராமராஜ். உடனே, அதுபற்றி விசாரணை யெல்லாம் முடிந்துவிட்டது. இப்போது தண்டனை குறுத்து என்ன கூறுகிறீர்கள்? என்று நீnullதிபதி கேட்டார். அதற்கு ராமராஜ், நான் குற்றவாளி கிடையாது. 40 ஆண்டு காலம் ராணுவத்தில் பணியாற்றியுள்ளேன். இந்த குற்றத்தை நான் செய்ய வில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து nullநீதிபதி ராதா தீர்ப்பு கூறினார். சிறுவன் தில்சனை கொலை செய்த குற்றத்துக்காக குற்றவாளி ராமராஜிக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாகவும், ஆயுத சட்ட பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் மற்றும் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படுவதாகவும், இவை ஒரே தண்டனையாக்கப்படுவதாகவும் நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் இந்த குற்றச்செயலுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும் தனது தீர்ப்பில் கூறினார். அபாரத தொகை ரூ.60 ஆயிரத்தில் ரூ.50 ஆயிரத்தை கொலை செய்யப்பட்ட தில்சனின் தாயாருக்கு கொடுக்க வேண்டும் என்று nullநீதிபதி ராதா உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பையடுத்து ராணுவ அதிகாரி ராமராஜ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.