எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஏப்.22 - தென் மண்டல செயலாளராக இருக்கும் எனக்கு தெரியாமல் மு.க.ஸ்டாலின் எப்படி இளைஞரணி கூட்டத்தை நடத்தினார் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆவேசமாக கேட்டுள்ளார். திமுக மாநில பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கு நேர்காணல் நடத்தி தேர்வு செய்து வருகிறார். இதில் சேலம் மாவட்டத்தில் தேர்வு நடைபெறும் போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சரும், திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகம் எதிர்ப்பு தெரிவித்தார். எங்கள் மாவட்ட நிர்வாகிகள் தேர்வை நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்று தலைமைக்கு கடிதமும் எழுதினார். இதன் பிறகு அவரை சமாதானம் செய்து அங்கு மு.க.ஸ்டாலின் இளைஞரணி நிர்வாகிகளை தேர்வு செய்தார். தென் மாவட்டங்களில் தேர்வு செய்யுமபோது இங்கு மு.க.அழகிரிக்கு அதிகமான ஆதரவாளர்களால் பிரச்சனை ஏற்படும் என்று கருதிய மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே தலைமை கழக அறிவிப்பை வெளியிட்டு, அதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
முழுமையாக மு.க.அழகிரியின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை மாநகர் மற்றும் மதுரை புறநகரில் இளைஞரணி நிர்வாகிகள் நேர்காணலுக்கு மு.க.ஸ்டாலின் காத்துக்கொண்டிருந்தார். மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வெளிநாடு சென்றிருந்த வேளையில் திடீரென மதுரையில் நேர்காணல் நடைபெற்றது. கடந்த 13 மற்றும் 14 ம்தேதி நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றது. 14ம் தேதி திமுக பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர்கள் பி.மூர்த்தி, கோ.தளபதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால் முக்கியமான நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மு.க.ஸ்டாலின் சென்னை சென்றதும் தலைமை கழகத்தில் முறையிட்டதின் பேரில் மதுரை திமுக நிர்வாகிகள் இசக்கிமுத்து, சிவக்குமார், உதயகுமார், சின்னம்மாள், ரவீந்திரன், ஒச்சுபாலு, கோபிநாதன், பாண்டியராஜன், முபாரக்மந்திரி, முருகன், ராமலிங்கம், வி.கே.குருசாமி, தர்மலிங்கம், ஜெயராஜ், பி.எம்.மன்னன் ஆகிய 17 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. வெளிநாடு சென்று திரும்பிய மு.க.அழகிரியிடம் பாதிக்கப்பட்ட திமுக நிர்வாகிகள் முறையிட்டனர். உங்களுடைய பெயரை புறக்கணித்ததால்தான் நாங்கள் நிகழ்ச்சியை புறக்கணித்தோம் என்றும் தெரிவித்தனர். மேலும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட மதுரை மாநகர நிர்வாகிகள் 17 பேரும் விளக்கம் அளித்து தலைமை கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியும் விட்டனர்.
இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து மதுரை திரும்பிய மு.க. அழகிரி ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, திமுகவில் நான் தென்மண்டல செயலாளராக இருக்கிறேன். எனவே தென் மண்டல பகுதியில் என்ன நிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தாலும் எனக்கு தெரிவிக்கப்பட வேண்டும். மதுரை மாநகர் மற்றும் மதுரை புறநகர் மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு நடப்பது பற்றியோ, மதுரையில் பொதுக்கூட்டம் நடப்பது பற்றியோ என்னிடம் மு.க.ஸ்டாலின் முன்பே தெரிவிக்கவில்லை. இது போன்று பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் என்னிடம் ஆலோசிப்பதில்லை. தென் மண்டல செயலாளர் என்ற முறையில் என்னிடம் ஆலோசித்திருக்க வேண்டும். கட்சி தலைவர் ஜனநாயக முறையில் நடந்து கொள்கிறார். ஆனால் மற்ற தலைவர்கள் யாரும் அவரைப்போல நடந்து கொள்வதில்லை. கட்சி தலைவரை பொறுத்தவரை அவர் மிகச்சரியாக செயல்படுகிறார். கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் தலைவர்களுக்கு அவர் உரிய மரியாதை கொடுக்கிறார். தலைவரின் இந்த ஜனநாயக வழியை மற்றவர்கள் பின்பற்றுவதில்லை. சென்னையில் இருந்து வருபவர்களை ரயில்நிலையத்திற்கு சென்று கண்டிப்பாக வரவேற்க வேண்டும் என்று கட்சியில் சட்டதிட்டமோ, விதியோ இல்லை. இதை நான் பலதடவை விளக்கி விட்டேன். மதுரையில் நடந்த சம்பவம் தொடர்பாக கட்சி நிர்வாகிகள் என்னை சந்தித்து விளக்கம் கொடுத்தனர். திமுக மேலிடம் கேட்ட விளக்கத்திற்கு உரிய பதிலை அனுப்பியுள்ளனர்.
ஸ்டாலின் மதுரை வந்தது பற்றி எனக்கு முறைப்படி எந்த தகவலும் சொல்லப்படவில்லை. எனவே அவரது மதுரை நிகழ்ச்சிகளை புறக்கணிக்குமாறு நான் என் ஆதரவாளர்களிடம் அறிவுறுத்தியதில் எந்த தவறும் இல்லை. கட்சியில் ஒருவர் ஒரு பதவி தான் வகிக்க வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் மதுரை மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயராமன் மண்டல தலைவர் பதவியையும் வகித்து வருகிறார் அது எப்படி? இவ்வாறு அவர் கூறியுள்ளார். மு.க.அழகிரியின் இந்த ஆவேச பேட்டியால் திமுக தலைமை கழகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரியின் மோதலை எப்படி சமாளிப்பது என்று திமுக தலைவர் கருணாநிதி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி18 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 17 hours ago |
ரவா பர்பி1 week 19 hours ago |
-
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த