எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராய்ப்பூர்,ஏப்.24 - கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை மீட்க சட்டீஸ்கர் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல முக்கியப் பிரமுகர்கள் கொண்ட தூதுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. க்சட்டீஷ்கர் மாவட்டத்தில் சுக்மா மாவட்ட கலெக்டராக பணியாற்றி வருபவர் அலெக்ஸ் பால் மேனன். இவர் தமிழகத்தில் உள்ள நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். சிறந்த, நேர்மையான கலெக்டரான இவர் கடந்த பல தினங்களுக்கு முன்பு ஒரு கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது மக்களோடு மக்களாக மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஊடுருவி கலெக்டர் மேனனை கடத்திச் சென்றுவிட்டனர். முதலில் மேனனை கடத்தியது யார் என்று தெரியாமல் இருந்தது. மாவோயிஸ்ட் பிரிவுகள் இந்த கடத்தல் சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்காமல் இருந்தது. பின்னர் மேனனை கடத்தியது நாங்கள்தான் என்றும் அவரை விடுவிக்க 3 நிபந்தனைகளை மாவோயிஸ்ட்கள் விதித்துள்ளனர். அதுவும் நாளைக்குள் இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று காலக்கெடுவை நிர்ணயித்துள்ளனர்.
இதனையொட்டி மேனனை மீட்கும் முயற்சியில் சட்டீஸ்கர் அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. முதல்வர் ராமன் சிங் தலைமையில் அவசரக்கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவோயிஸ்ட்களுக்கும் அரசுக்கும் இடையே இணைப்பு பாலமாக செயல்பட தூதுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் துணைமுதல்வர் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் இன்று காலையில் மாவோயிஸ்ட் பிரதிநிதிகளுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என்று தெரிகிறது. அதற்குள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் விதித்துள்ள நிபந்தனைகளில் ஒன்றான 8 மாவோயிஸ்ட்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை அரசு நிறைவேற்றும் என்று தெரிகிறது. பஸ்தர் பகுதியில் இருந்து பாதுகாப்பு படை வாபஸ் பெற வேண்டும். மாவோயிஸ்டுகளை தேடும் பணியை நிறுத்த வேண்டும் என்ற இதர கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும் அரசு ஆலோசித்து வருவதாக தெரிகிறது. ஆஸ்துமா நோயாளியான மேனன் கடத்தப்பட்டபோது அவரிடம் மருந்து மாத்திரைகள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால் தனது கணவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவரது மனைவி உருக்கமான வேண்டுகோளை ஏற்கனவே விடுத்துள்ளார். மேனனை பத்திரமாக மீட்கும் விஷயத்தில் மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சரும் அமைச்சகமும் அவ்வவப்போது ஆலோசனைகளை கூறிவருகின்றன. மாவோயிஸ்ட்கள் விதித்துள்ள காலகெடு நாளையுடன் முடிவடைகிறது. அதனால் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படலாம் என்று உறுதியாக தெரிகிறது. நாளைக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மக்கள் நீதிமன்றத்தில் மேனன் நிறுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என்றும் மாவோயிஸ்ட்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
கலெக்டர் மேனன் இருக்கும் இடம் தெரிந்தது
மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் இருக்கும் இடம் தெரிந்தது.
கடந்த சனிக்கிழமை அன்று கடத்தப்பட்ட கலெக்டர் மேனனை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மறைவான இடத்தில் வைத்திருந்தனர். அவர் இருக்கும் இடம் முதலில் தெரியாமல் இருந்தது. சட்டீஷ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தர் அல்லது அண்டை மாநிலமான ஒடிசாவில் மேனனை மாவோயிஸ்ட்கள் மறைத்து வைத்திருக்கலாம் என்று கருதப்பட்டது. அடர்ந்த காட்டுப்பகுதியாக இருப்பதாலும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும் போலீசார், மத்திய ரிசர்வ் படையினர் தேடியும் மேனனை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் ஆளில்லாத விமானம் மூலம் மேனனை தேட முடிவு செய்யப்பட்டது. விமானம் மூலம் தேடினால் மேனன் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா என்றும் ஆராயப்பட்டது. இறுதியில் ஆளில்லாத விமானம் மூலம் நேற்று மேனனை தேடநடவடிக்கை எடுக்கப்பட்டது. சட்டீஸ்கர் மற்றும் ஒடிசா பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் ஆளில்லா விமான் தேடியது. அப்போது ஒடிசாவில் காட்டுப்பகுதிகள் நிறைந்த மல்க்கான்கிரி என்ற இடத்தில் கலெக்டர் மேனன் இருப்பதும் அவரை சுற்றி மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: