எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.26 - ஸ்ரீபெரும்புதூர், திருத்தணி, அழகர் மலை, குற்றாலம் திருச்செந்தூர் உட்பட சுற்றுலாத்தளங்களில் தலா ரூ.5 கோடியில் கட்டமைப்பு வசதிகள், செட்டிநாடு பகுதியில் ரூ.11 கோடியில் சுற்றுலாத் தொகுப்புத் திட்டம், ரூ.50 கோடியில் நெருஞ் சுற்றுலாத்திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்தார். சட்டசபையில் நேற்று சுற்றுலா மானியக் கோரிக்கையை சமர்பித்து அவர் பேசியதாவது:-
சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, சுற்றுலா தகவல் மையம், ஓய்வுக் கூடம், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின் விளக்குகள், வாகனங்கள் நிறுத்துமிடம், கோவில் குளம் சீரமைப்பு போன்ற சுற்றுலா கட்டமைப்பு பணிகள் ஸ்ரீபெரும்புதூரில் ரூ.5 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை முருகன் ஆலயமும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் கோவிலும் உள்ளது.
இங்கு சித்திரைத் திருவிழா, ஆடித் திருவிழா, பங்குனி உத்திரம் போன்ற விழாக் காலங்களில் மிக அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.
இங்கு பக்தர்களின் வசதிக்காக சுற்றுலா கட்டமைப்பு வசதிகள் ரூ.5 கோடி மதிப்பில் இங்கு ஏற்படுத்தப்படும்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பில் பூங்காக்களை அழகுபடுத்துதல், விளக்கு வசதிகள், தங்கும் விடுதி, கழிப்பிட வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம், நீர் விளையாட்டுகள் ஆகிய சுற்றுலா கட்டமைப்பு வசதிகள் ரூ.5 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும்.
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுற்றுலா தகவல் மையம், பூங்காக்கள், தங்கும் அறைகள், கழிப்பிட வசதிகள், மலைவழிப் பயணப் பாதைகள், வாகனங்கள் நிறுத்துமிடம், விளக்கு வசதிகள் தேனி மாவட்டம் மேகமலை மற்றும் சுருளி நீர்வீழ்ச்சி பகுதியில் ரூ.5 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும்.
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அழகிய நீர்வீழ்ச்சிகளுக்குப் பெயர் பெற்ற மிகச் சிறந்த சுற்றுலா மையமாகும். இங்கு சுற்றுலாத்தகவல் மையம், தங்கும் வசதிகள், அருவிகளில் கட்டமைப்பு வசதிகள், பூங்காக்கள், விளக்கு வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை ரூ.5 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான அருள்மிகு சுப்ரமணியர் கோயில் மிகவும் புகழ் பெற்ற கோவிலாகும். இங்கு முக்கிய விழாக்காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு சுற்றுலா தகவல் மையம், ரத வீதிகள் மேம்பாடு, கூடுதல் தங்கும் விடுதிகள், கழிப்பிட வசிதகள், விளக்கு வசதிகள், பூங்காக்கள், வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற சுற்றுலா கட்டமைப்பு வசதிகள் ரூ.5 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியிலுள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான அருள்மிகு சுப்ரமணியர் கோவில் மிகவும் புகழ் பெற்ற கோவிலாகும். இங்கு சுற்றுலா தகவல் மையம், தங்கும் விடுதிகள், சிமெண்ட் சாலை வசதிகள், பூங்காக்கள், கழிப்பிட வசதிகள், விளக்கு வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற சுற்றுலா கட்டமைப்பு வசதிகள் ரூ.5 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும்.
சிவகங்கை மாவட்டம், செட்டிநாடு பகுதியில், கோவில், கலை, கைத்திறன், பண்பாடு போன்றவற்றிற்கு பெயர் பெற்றுள்ள பிள்ளையார்பட்டி, வைரவன்பட்டி, கானாடுகாத்தான், மாத்தூர், ஆத்தங்குடி, இளையாத்தான்குடி, நேமம் ஆகிய கிராமங்களில் ஊரக சுற்றுலாத் தொகுப்பு திட்டம் ரூ.11 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.
பெருஞ்சுற்றுலா திட்டத்தின்கீழ், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், விருத்தாச்சலம், திருச்சிராப்பள்ளி சுற்றுலா சுற்றிலுள்ள சுற்றுலா மையங்களில் சுற்றுலா கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள ரூ.50 கோடி மதிப்பில் விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் நீண்டதூரம் பயணம் செய்யும் சுற்றுலப்பயணிகளின் வசதிக்காக தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில், சிறிது நேரம் ஓய்வெடுத்துச் செல்ல வசதியாக சுற்றுலா தகவல் மையம், ஓய்வு அறைகள், உணவு விடுதிகள், பூங்காக்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறைகள் போன்ற வசதிகள் நான்கு இடங்களில் மொத்தம் ரூ.8 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும்.
தூய்மைமிகு இந்தியா திட்டத்தின்கீழ், சுற்றுலாப்பயணிகள் அதிகம் வரும் இடங்களில் சுற்றுபுறப் பயணிகள் அதிகம் வரும் இடங்களில் சுற்றுப்புறச் சுகாதாரம் மேம்படுத்தப்படும். ரூ.5 கோடி மதிப்பில் சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, முக்கிய கோவில்கள், பாரம்பரியமிக்க நினைவுச் சின்னங்கள், நீர்வீழ்ச்சிகள், மலை வாசஸ்தலங்கள், படகு குழாம்கள் போன்ற இடங்களை தூய்மையான முறையில் பராமரிக்கவும், திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டிலுள்ள சுற்றுலாத்தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தருவது மிகவும் அவசியமாகும். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து பிரபலம் அடையாத சுற்றுலாத் தலங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தரக்கோரி அதிக அளவில் கோரிக்கைகள் வந்துள்ளன. எனவே, பின்வரும் சுற்றுலா தலங்களில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மொத்தம் ரூ.10 கோடி மதிப்பில் செய்யப்படும்.
தேனி மாவட்டம் கும்பக்கரை அருவி, திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், சிறுவாபுரி முருகன் கோவில், அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பறவைகள் சரணாலயம், திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக்காடு சனீஸ்வரர் ஆலயம், ஆவூர் பசுபதீஸ்ரர் - பஞ்ச பைரவர் கோவில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், பொட்டல்புதூர் மொகைதீன், தர்கா, சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் தேவலாயம், பிரான்மலை, நாட்டரசன் கோட்டை, ஏரியூர் மருந்தீஸ்வரர் கோவில், திருப்பத்தூர் பரியா மருதீஸ்வரர் கோவில், திருவண்ணாமலை மாவட்டம் தவளகிரீஸ்வரர் ஆலயம், சேலம் மாவட்டம் கங்கவள்ளி, வடசென்னிமலை கோவில், திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணைப்பகுதியில் அமணலிங்கேஸ்வரர் கோவில், தாராபுரம் ஆஞ்சநேயர் கோவில், விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலை, கோமுகி அணை, கூத்தாண்டவர் கோவில், இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில், உத்தரகோசமங்கை, ஓரியூர், வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் சிவன் கோவில், விளப்பாக்கம் பஞ்ச பாண்டவர் மலை, கோயம்புத்தூர் மாவட்டம் கல்லாறு, திருச்சி மாவட்டம் புளியஞ்சோலை, ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம்.
சுற்றுலாத் தலங்களை இணைக்கும் சாலைகள் ரூ.10 கோடி செலவில் நெடுஞ்சாலைகள் துறை மூலம் மேம்படுத்தப்படும்.
சுற்றுலா கட்டமைப்பு பணிகளை சிறந்த முறையில் கண்காணிக்க, மாவட்டங்களில் பணியாற்றும் சுற்றுலா அலுவலர்களுக்கு 14 புதிய ஜீப்புகள் ரூ.98 லட்சம் செலவில் வாங்கப்படும்.
சிதம்பரம், கொடைக்கானல், கன்னியாகுமரி, இராமேசுவரம், தஞ்சாவூர், திருநெல்வேலி, சேலம், தருமபுரி, பூம்புகார் ஆகிய இடங்களிலுள்ள சுற்றுலா அலுவலகங்கள், திருச்சிராப்பள்ளி, சென்னை சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களிலுள்ள சுற்றுலாத்தகவல் மையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம், சென்னை மத்திய மற்றும் எழும்பூர் இரயில் நிலையங்களிலுள்ள சுற்றுலாத்தகவல் மையங்கள், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கட்டபொம்மன் நினைவுக்கோட்டையிலுள்ள சுற்றுலாத்தகவல் மையம், ஐதராபாத்திலுள்ள சுற்றுலாத் தகவல் மையம் ஆகியவை ரூ.54 லட்சம் செலவில் மேம்படுத்தி புனரமைக்கப்படும்.
அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இந்திய சுற்றுலாத்துறையுடன் இணைந்து விளம்பர முகாம்கள் நடத்தப்படும்.
ஊட்டி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலாத்தலங்களில் கோடை விழா 30 நாட்களும், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் பாரம்பரிய சுற்றுலா விழா ஏழு நாட்களும் நடத்தப்படும். எனவே, சுற்றுலாப் பயணிகள், சுற்றுலாத் தலங்களை சிறந்த முறையில் பார்வையிட திறந்த தளம் சுற்றுலாச் சிறப்பு பேருந்து சென்னை, மதுரை, திருச்சி, மாநகரங்களில் அறிமுகப்படுத்தப்படும்.
கொடைக்கானல், ஏற்காடு, ஒகேனக்கல், திருச்செந்தூர் மற்றும் குற்றாலம் ஆகிய இடங்களிலுள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான தங்கும் விடுதிகளிலுள்ள அறைகள் ரூ.2.82 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். மேலும் தமிழக முதல்வரின் ஆணையின்படி, விடுதிகளில் தங்குவதற்கும், பயணங்கள் மேற்கொள்வதற்கும் கைபேசி மற்றும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும்.
மாமல்லபுரத்தில் ஆடியோ வசதியுடன் கூடிய நடமாடும் சுற்றுலா தகவல் வழிகாட்டி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.