முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவமதிப்பு வழக்கில் பாக்.பிரதமர் குற்றவாளியாக அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,ஏப்.27 - அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலான குற்றாளி என்று அந்த நாட்டு சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. அவருக்கு எச்சரிக்கையாக அரைநிமிட நேர அடையாள தண்டனை மட்டும் வழங்கப்பட்டது. பாகிஸ்தான் அதிபராக இருக்கும் ஆசிப் அலி ஜர்தாரி மீது சுவிட்சர்லாந்து நாட்டில் பல்வேறு ஊழல் வழக்குகள் நடந்தன. இந்த வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு அந்த நாட்டு அரசுக்கு கடிதம் எழுத கிலானிக்கு பாகிஸ்தான் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் கடிதம் எழுதினால் தம்முடைய பிரதமர் பதவி காலியாகிவிடும் என்று கருதிய கிலானி கடிதம் எழுதவில்லை. இதனையொட்டி பாகிஸ்தான் சுப்ரீம்கோர்ட்டில் கிலானி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நேற்று முடிவடைந்தது. விசாரணை முடிவில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் பிரதமர் கிலானி குற்றவாளி என்று நீதிபதிகள் அறிவித்தனர். ஆனால் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அவருக்கு கூடுதலாக தண்டனை வழங்காமல் எச்சரிக்கையாக அரைநிமிடம் மட்டும் குற்றவாளி கூண்டிலேயே நிறுத்தி அரைநிமிடம் மட்டும் அடையாள தண்டனையை கோர்ட்டு வழங்கியது. இந்த தண்டனை முடிந்தவுடன் கிலானி மகிழ்ச்சியுடன் கோர்ட்டை விட்டு வெளியே வந்தார். அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து கைசைத்தார். இந்த அரைநிமிட நேர தண்டனையை கிலானியை பதவியில் இருந்து விலக செய்ய முடியும் என்றும் சட்டநிபுணர்கள் கருதுகிறார். கிலானிக்கு கோர்ட்டு கூடுதல் தண்டனை வழங்கியிருக்கும். ஆனால் பாகிஸ்தானில் அல்-கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளின் வன்முறையில் பாகிஸ்தான் சின்னாபின்னமாகி கிடக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கிலானிக்கு கூடுதல் தண்டனை வழங்கினால் நாடு மேலும் மோசமாகிவிடும் என்று கருதிய நீதிபதிகள் கிலானிக்கு தண்டனையை குறைத்துவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்