எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.28 - புதுக்கோட்டை தொகுதிக்கான இடைத்தேர்தலில் பணியாற்ற அமைச்சர்கள் உட்பட 43 பெர் கொண்ட தேர்தல் பணிக் குழுவை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதில் 32 பேர் அமைச்சர்கள். புதுக்கோட்டை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முத்துக்குமரன் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து இத்தொகுதிக்கு ஜூன் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக கார்த்திக் தொண்டமானை முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர் நேற்று முதல் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளார். ஏற்கெனவே போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது.
இதனிடையே புதுக்கோட்டை தொகுதியில் இடைத்தேர்தலில் பணியாற்றுவதற்கு அமைச்சர்கள் உள்ளிட்ட 43 பேர் கொண்ட குழுவை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
நிதி அமைச்சரான ஓ.பன்னீர் செல்வம் முதல் அமைச்சரான எம்.எஸ்.எம். ஆனந்தன் வரை அத்தனை பேரையும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.
கடந்த சங்கரன்கோவில் இடைத் தேர்தலிலும் கூட இப்படித்தான் அத்தனை அமைச்சர்களையும் களம் இறக்கி மற்ற கட்சிகளை மிரள வைத்தார் ஜெயலலிதா. தற்போதும் அதே பாணியில் அத்தனை அமைச்சர்களும் புதுக்கோட்டைக்குப் புறப்படுகிறார்கள்.
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மற்ற கட்சிகள் போட்டியிடுவதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டாத நிலையில் அதிமுக முழு வீச்சில் களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை இடைத்தேர்தலுக்கான அதிமுக பணிக்குழு குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
12.6.12 அன்று நடைபெறவுள்ள புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக,
ஓ. பன்னீர்செல்வம் கழகப் பொருளாளர் - நிதித்துறை அமைச்சர், கே.ஏ. செங்கோட்டையன் கழக தலைமை நிலையச் செயலாளர் - வருவாய்த் துறை அமைச்சர், நத்தம் இரா. விசுவநாதன் திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர், கே.பி. முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டக் கழகச் செயலாளர் உள்ளாட்சித் துறை அமைச்சர், ஆர். வைத்திலிங்கம் தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், பா.வளர்மதி கழக அமைப்புச் செயலாளர் சமூக நலத் துறை அமைச்சர், பி. பழனியப்பன் உயர் கல்வித் துறை அமைச்சர், சி.வி. சண்முகம் விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் வணிகவரி, பத்திரப் பதிவுத்துறை, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை அமைச்சர், செ. தாமோதரன் கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் வேளாண்மைத் துறை அமைச்சர், செல்லூர் கே. ராஜூ மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் கூட்டுறவுத்துறை அமைச்சர், பச்சைமால் கன்னியாகுமரி மாவட்டக் கழகச் செயலாளர் வனத்துறை அமைச்சர், எடப்பாடி கே.பழனிசாமி சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், ஆர். காமராஜ் திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் உணவுத் துறை அமைச்சர், வி. மூர்த்தி திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், எம்.சி. சம்பத் கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஊரகத் தொழில் மற்றும் மதிய சத்துணவுத் திட்ட அமைச்சர், கே.வி. ராமலிங்கம் ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொதுப்பணித் துறை அமைச்சர், சின்னையா காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர், பி. தங்கமணி நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் தொழில் துறை அமைச்சர், டாக்டர் எஸ். சுந்தரராஜ் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர், பி. செந்தூர்பாண்டியன் அவர்கள் திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர், எஸ். கோகுல இந்திரா கழக மகளிர் அணிச் செயலாளர் சுற்றுலாத் துறை அமைச்சர், ரமணா திருவள்ளூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சுற்றுச் சூழல் துறை அமைச்சர், சுப்பிரமணியன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் போக்குவரத்துத்துறை அமைச்சர், கே.ஏ. ஜெயபால் நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர் மீனளத் துறை அமைச்சர், என்.ஆர். சிவபதி திருச்சி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர், முக்கூர் என். சுப்பிரமணியன் திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டக் கழகச் செயலாளர் செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர், சி.த.செல்லப்பாண்டியன் தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் தொழிலாளர் நலத்துறை அமைச்சர், டாக்டர் வி.எஸ். விஜய் வேலூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், அ.முஹம்மத்ஜான் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், ஆனந்தன் திருப்ர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், டாக்டர் பி.எச். பாண்டியன் கழக அமைப்புச் செயலாளர், அ. தமிழ்மகன் உசேன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பொள்ளாச்சி ஏ. ஜெயராமன், எம்.எல்.ஏ., கழக தேர்தல் பிரிவுச் செயலாளர், அன்பழகன் ஜெயலலிதா பேரவைச் செயலாளர், ஆர். சின்னசாமி, எம்.எல்.ஏ., அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர், உதயகுமார், எம்.எல்.ஏ., கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர், எஸ். சரவணபெருமாள் கழக மாணவர் அணிச் செயலாளர், அ. அன்வர்ராஜா கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர், டாக்டர் வைகைச்செல்வன், எம்.எல்.ஏ., கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர், கு.ப. கிருஷ்ணன், எம்.எல்.ஏ., ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி, ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் முன்னாள் அமைச்சர் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, கழக வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.