முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ப.சிதம்பரத்திற்கு கண்டனம்: வல்லம்பர் பேரவை செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

திங்கட்கிழமை, 28 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

காரைக்குடி,மார்ச்.- 28 - சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் வல்லம்பர் சமூகத்தை புறக்கணித்த மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு கண்டனம் தெரிவித்து மாநில பேரவை செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வேட்பாளர் தேர்வில் காரைக்குடி தொகுதி மற்றும் திருமயம் தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வல்லம்பர் சமுதாயத்தை சேர்ந்த 9 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். ஏற்கனவே வல்லம்பர் சமுதாயத்தால் வெற்றி பெற்ற  சிதம்பரம் தற்போது மத்திய அமைச்சராக இருந்து வருகிறார். இந்த நிலையில் வல்லம்பர் சமுதாயத்தை புறக்கணித்து செயல்படும் சிதம்பரத்திற்கு எதிராக இனிவரும் காலங்களில் செயல்படுவோம். தேர்தலில் காரைக்குடி, திருமயம் தொகுதிகளில் வாய்ப்பு கேட்டு பலமுறை முயன்றும் எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் பெற்றுத் தராத சிதம்பரத்தை இனி வரும் காலங்களில் புறக்கணிக்கப்போவதாக தீர்மானம் இயற்றப்பட்டுள்ளதாக பேரவை தலைவர் செல்லப்பன் தெரிவித்தார். 

கூட்டத்தில் வல்லம்பர் பேரவை மாநில தலைவர் செல்லப்பன், மாநில துணை தலைவர்லண்டன் வேலு, மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல், பேரவை முன்னோடி துரைசிங்கம், செயற்குழு உறுப்பினர்கள் அருண்பாண்டியன், ராமசாமி, வாசுதேவன், உறுப்பினர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்