முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காரைக்கால்தெற்கில் தே.மு.தி.க.வும் காமராஜர் நகரில் சி.பி.ஐ.யும் போட்டி-ஜெயலலிதா

திங்கட்கிழமை, 28 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச், - 28 - புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள  இந்திய கம்யூனிஸ்டு கட்சி( சி.பி.ஐ)க்கு காமராஜ் நகரையும், தே.மு.தி.க.வுக்கு காரைக்கால் தெற்கு தொகுதியையும் ஒதுக்கீடு செய்து ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 13.04.2011 அன்று நடைபெற உள்ள புதுச்சேரி மாநில சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கும், அதன் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தே.மு.தி.க.வுக்கும் இடையே தொகுதி பங்கீடு குறித்து உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, கீழ்க்கண்ட கட்சிகள் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவது என ஒப்பந்தம் ஆனது. 

இந்திய கம்யூனிஸ்டு கட்சி(சி.பி.ஐ.)-காமராஜ் நகர்.

தே.மு.தி.க.-காரைக்கால் தெற்கு.

இவ்வாறு ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்