முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி வேட்பாளர் அறிமுக கூட்டம் செந்தமிழன் பங்கேற்பு

திங்கட்கிழமை, 28 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச், - 28 - அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது. அ.தி.மு.க. தென்சென்னை மாவட்ட செயலாளர் செந்தமிழன் கலந்து கொண்டார். அ.தி.மு.க. கூட்டணியில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் தமீமுன் அன்சாரி போட்டியிடுகிறார். வேட்பாளர் தமீமுன் அன்சாரியை அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று மாலை பிள்ளையார் கோவில் தெருவிலுள்ள ஜெயின் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. தென்சென்னை மாவட்ட செயலாளர் செந்தமிழன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் பகுதி செயலாளர் அலிகான் பஷீர் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் மா.பாண்டியன் முன்னிலை வகித்தார். பகுதி பொருளாளர் தா.மரைக்காயர் உட்பட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வேட்பாளர் தமீமுன் அன்சாரியை அறிமுகப்படுத்தி நிர்வாகிகள் பேசினர். மேலும் கட்சி வேட்பாளர் தமீமுன் அன்சாரியை வெற்றிபெற செய்ய நடைபெற வேண்டிய வேலைகள் குறிதது ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் 84-வது வட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.கே.சிவா நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்