எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முசிறி மார்ச்.- 28 - தமிழகத்தில் தி.மு.க. மைனாரிட்டி ஆட்சியில் தொடரும் மின்வெட்டால் விவசாயம் மற்றும் தொழில் உற்பத்தி கடுமையாக பாதித்துவிட்டது என்று ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார். முசிறியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். முசிறி புறவழிச்சாலை ரவுண்டானாவில் தனது பிரசாரத்தை ஜெயலலிதா துவக்கினார். அப்போது அவர் கூறியதாவது:- இது சாதாரண தேர்தல் அல்ல. தமிழக மக்களுக்கு நிரந்தர விடுதலை தரவிருக்கும் தேர்தலாகும். குடும்ப ஆட்சியை ஒழிப்பதற்காக நடக்கும் தேர்தல். கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் விலைவாசி உயர வழிவகுத்து பதுக்கலுக்கு பக்கபலமாக இருந்து அரசு நிர்வாகத்தை சீர்குலைய வைத்துள்ள ஆட்சி நடந்துள்ளது. டீசல், பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்பதற்கு ஆதரவு தெரிவித்து கடந்த ஒரு வருடத்திலேயே 15 முறை விலை உயர்த்தப்பட்டதற்கு கருணாநிதியே காரணமாகும். இவரது ஆட்சியில் விலைவாசி உயர்ந்து மக்கள் கஷ்டப்படுவதுதான் மிச்சமாகும். ரூ. 15-க்கு விற்ற அரிசி 42 ஆக உயர்ந்துவிட்டது. ஒரு கிலோ புளி ரூ35-ல் இருந்து 110 ஆக உயர்ந்துவிட்டது. ஒரு கிலோ பூண்டு ரூ.32-க்கு விற்றது. அது தற்போது ரூ.250 ஆக உயர்ந்துவிட்டது. தமிழகம் முழுவதும் மணல் கொள்ளகள் அமோக நடந்தது. இதனால் ரூ. 50 ஆயிரம் கோடி வரை தி.மு.க. ஆட்சியில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ரூ. 2 ஆயிரத்து 500-க்கு விற்ற ஒரு லாரி மணல் ரூ. 15 ஆயிரத்திற்கு மேல் உயர்ந்துவிட்டது. ரூ. 3-க்கு விற்ற செங்கல் ஒன்று ரூ. 6 ஆக உயர்ந்துவிட்டது. எனவே இனி கனவில்தான் வீடு கட்டமுடியும். மாநிலம் முழுவதும் மின்வெட்டு,தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஆரம்பத்ததிற்கு முடிவே இல்லை. இதனால் விவசாயம் மற்றும் தொழில் உற்பத்தி அடியோடு நசிந்துவிட்டது. தற்சமயம் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியே அல்ல. ஒரு ரவுடிக்கும்பல்தான் தமிழகத்தை ஆட்சி செய்து சீர்குலைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்சியால் ரூ. ஒரு லட்சம் கோடி கடன் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் பங்குதாரராக இருந்த கருணாநிதி, ரூ. ஒரு லட்சம் கோடி கொள்ளையடித்துள்ளார். இந்த பணம் அரசுக்கு கிடைத்திருந்தால் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்திருக்கும். காலாவதி மருந்து விற்பனை மணல் கொள்ளை,ரேசன் அரிசி கடத்தல் என ஊழல் ஆட்சி நடத்திவிட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார் கருணாநிதி. காவல் துறையினரே கவனியுங்கள். நான் மக்களை சந்திக்க வந்திருக்கிறேன். மக்கள் என்னை சந்திக்க வந்துள்ளனர். எத்தனையோ ஊர்களில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறேன். இங்குதான் மக்களை தள்ளிவிடுகிறீர்கள். என்னை பார்க்க வந்த மக்களை சந்திக்க விடாமல் சுவர்போல் மறைத்து நிற்கிறீர்கள். என் மக்கள் என்னை பார்க்க விடுங்கள்.( இவ்வாறு போலீசாரை பார்த்து ஜெயலலிதா கூறினார்) மேலும் ஆந்திர அரசு பாலாற்றில் அணை கட்டுவதை கருணாநிதியால் தடுத்து நிறுத்த முடியவில்லை. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இந்த ஆட்சியில் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். திரைப்படத்துறையிலும் கருணாநிதி குடும்பமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மொத்தத்தில் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் தி.மு.க.விடம் சிக்கி சின்னாப்பின்னப்படுத்தப்பட்டுவிட்டது. தமிழக மக்களின் பொதுவான பிரச்சினைகளை நான் அறிவேன். எம்.ஜி.ஆர். ஆசியாலும் உங்களின் நல்ல ஆதரவினாலும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்த பிறகு முசிறி பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண்போம். பாசன வாய்க்கால்கள் தூர்வாறப்படும். காவிரியில் தடுப்பணைகள் கட்டி நீர்பாசனத்திற்கு வழிவகை செய்யப்படும். மேலும் முசிறியில் ஆசிரியர் பயிற்சி பள்ளி அமைத்தது தருவோம். கனரக தொழிற்சாலை அமைக்கப்படும். துறையூர், குளித்தலை, மணச்சநல்லூர், திருவரம்பூர், லால்குடி ஆகிய பகுதிகளில் உள்ள பிரச்சினைகளை நான் அறிவேன். அப்பிரச்சினைகளை தீர்க்க நான் பாடுபடுவேன். விலைவாசி குறைக்கப்படும். அரசு ஊழியர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும். உங்களின் மனச்சாட்சிப்படி இந்த தேர்தலில் வாக்களியுங்கள். குடும்பத்திற்கு 20 கிலோ அரிசி, திருமண திட்டத்தின் கீழ், ரூ. 25 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும். சுய உதவி குழுக்களுக்கு ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். அதில் 25 சதவீதம் மான்யமாக வழங்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு இலவசமாக 3 சென்ட் இடம் வழங்கப்படும். எனவே அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டுகிறேன். அ.தி.மு.க. வேட்பாளர்கள் முசிறி தொகுதி சிவபதி, குளித்தலை தொகுதி பாப்பா சுந்தரம், துறையூர் தொகுதி இந்திரா காந்தி, மணச்சநல்லூர் தொகுதி பூனாட்சி, தே.மு.தி.க. வேட்பாளர்கள் திருவெறும்பூர் தொகுதி செந்தில்குமார், லால்குடி தொகுதி செந்துரேஸ்வரர் ஆகியோர்களுக்கு வாக்களித்து பெரும்வாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்ய வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.