முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகில இந்திய தலைவர் பிரகாஷ் காரத் தமிழகத்தில் 3 நாள் தேர்தல் பிரச்சாரம்

திங்கட்கிழமை, 28 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, மார்ச், - 28 - தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய தலைவர்கள் பிரகாஷ் காரத், சீத்தாராம் எச்சூரி, பிருந்தா காரத் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்கின்றனர். பிரகாஷ் காரத் ஏப்ரல் 5,6,7 ஆகிய 3 நாட்கள் தமிழகத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

இவர்களது தேர்தல் சுற்றுப்பயண விவரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை வருமாறு:

2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி அகில இந்திய தலைவர்கள் பிரச்சார விபரம் :​

பிரகாஷ் காரத்

ஏப்ரல் 5, 2011 ​ கன்னியாகுமரி மாவட்டம், நெல்லை மாவட்டம்,

ஏப்ரல் 6, 2011 ​ திருவெறும்nullர், திருச்சி, 

ஏப்ரல் 7, 2011 ​ திருப்nullர்.

சீத்தாராம் எச்சூரி

ஏப்ரல் 3, 2011 ​ திருவில்லிபுத்துர், மதுரை,

ஏப்ரல் 4, 2011 ​ அரூர்,

ஏப்ரல் 5, 2011 ​ சென்னை.

பிருந்தா காரத்

ஏப்ரல் 1, 2011 ​ சென்னை,

ஏப்ரல் 2, 2011 ​ விக்கிரவாண்டி,​ சிதம்பரம்,

ஏப்ரல் 3, 2011 ​ கீழ்வேளூர்

ஏப்ரல் 4, 2011 ​ பெரியகுளம், போடி.

மற்றும் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன் எம்.பி., உ. வாசுகி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தில் கலந்து கொள்கிறார்கள். 

இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்