முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மட்டன்,கோழி பிரியாணியை விரும்பி சாப்பிடும் இந்திய-பாக்.கிரிக்கெட் வீரர்கள்

திங்கட்கிழமை, 28 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

சண்டிகார்,மார்ச்.- 28 - கிரிக்கெட் விளையாட்டில் எதிரும் புதிருமாக இருக்கும் இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மட்டன், சிக்கன் பிரியாணி சாப்பிடுவதில் ஒருவருக்கொருவர் விருப்பமாக உள்ளனர். மொகாலியில் வருகின்ற 30-ம் தேதி (புதன்கிழமை) மொகாலி உலக கிரிக்கெட் கோப்பைக்கான காலிறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதற்காக இந்த இரண்டு அணி வீரர்களும் மொகாலிக்கு வந்து சேர்ந்துள்ளனர். இவர்கள் மொகாலியில் உள்ள ஹோட்டல் தாஜ்ஜில் தங்கியிருக்கிறார்கள். விளையாட்டில் போட்டியாக இருக்கும் இந்த இரு அணி வீரர்களும் உணவு விஷயத்தில் ஒரே விருப்பமும் ஆசையும் ருசியும் உடையவர்களாக இருக்கிறார்கள். மொகாலியின் உணவு பொருட்களை சாப்பிடுவதில் ஆசையாக உள்ளார்கள். அதுவும் சிக்கன் திக்கா, மற்றும் சிக்கன், மட்டன் பிரியாணிகளை இரு கிரிக்கெட் அணி வீரர்களும் வெளுத்துக்கட்டுகிறார்கள் என்று ஹோட்டல் தாஜ் தலைமை நிர்வாக அதிகாரி நீராஜ் செளத்ரி தெரிவித்தார். மேலும் பல வீரர்கள் தந்தூரி சிக்கனை பிரியத்துடன் சாப்பிடுகிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்