எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,மே.- 7 - மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் அழகர் இறங்கினார். இதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வந்து அழகரை தரிசித்தனர். உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைதிருவிழா சைவ, வைணவ பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. இதில் முக்கிய நிகழ்வுகளான பட்டபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து மீனாட்சியையும், சுந்தரேசுவரையும் தரிசித்தனர். கடந்த 4ம் தேதி உற்சவ சாந்தியுடன் மீனாட்சி திருவிழா முடிவடைந்த நிலையில், அழகர் திருவிழா துவங்கியது. கடந்த 4ம் தேதி மாலை 6 மணிக்கு சுந்தரராஜபெருமாள் கண்டாங்கி சேலை கட்டி கையில் தடியுடனும், நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் வேடம் பூண்டு மலையில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டார். அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல், சுந்தர்ராஜன்பட்டி வழியாக நேற்றுமுன்தினம் காலை 6 மணிக்கு மூன்றுமாவடி வந்து சேர்ந்த அழகரை மதுரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து அழகரை தரிசித்தனர். இதை தொடர்ந்து அப்பகுதியிலுள்ள திருக்கண்களில் எழுந்தருளிய அழகர் இரவு 10 மணிக்கு தல்லாகுளம் பிரசன்னவெங்கடாஜலபதி கோவிலுக்கு வந்தார். அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் அழகரை வழிபட்டனர். இங்கு அழகரை தரிசிக்க விடிய, விடிய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பின்னர் பெருமாள் திருமஞ்சனமாகி தங்ககுதிரை வாகனத்தில் எழுந்தருளினார். நள்ளிரவு 12 மணியளவில் குதிரை வாகனத்தில் சாத்துப்படியாகி, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு வெட்டிவேர் சப்பரத்தில் அழகர் காட்சியளித்தார். தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலுக்கு நேற்று அதிகாலை 2.30 மணிக்கு வந்த அழகர் தங்ககுதிரை வாகனத்தில் ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், அழகர் வேடம் அணிந்திருந்தவர்களும் தாரை தப்பட்டை முழங்க அழகரை வரவேற்றனர். கள்ளழகர், அனுமன் வேடமிட்டும், காவடி ஆட்டம் ஆடியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தபடியும் அழகரின் முன்பு பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர். வைகை ஆற்றுக்குள் உள்ள வெள்ளம் கரைக்கு வந்து விட்டது போல தல்லாகுளத்தில் இருந்து வைகை ஆறுவரை மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்து வந்த படி ஜொலிக்கும் தங்ககுதிரை வாகனத்தில் அழகர் வந்தது பார்ப்பவர்களை பரவசமடைய செய்தது. மூங்கில் கடை வீதியில் உள்ள பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளிய அழகர் காலை 5.30 மணிக்கெல்லாம் வைகை கரையில் உள்ள கடைசி மண்டகப்படிக்கு வந்து விட்டார். முன்னதாக அழகரை வரவேற்பதாக வெள்ளைக்குதிரை வாகனத்தில் வந்த வீரராகவபெருமாள் வைகை ஆற்று பந்திலில் காத்திருந்தார். அழகரை தரிசிக்க தென்மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து 10 லடசத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வைகை ஆற்றில் திரண்டு இருந்தனர். வைகை ஆற்றுக்குள்ளும், வைகை கரை ஓரமும் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காட்சி அளித்தன. வைகை ஆற்றில் தண்ணீர் வெள்ளத்திற்கு பதில் மக்கள்வெள்ளம் வந்து விட்டதோ என்று பார்ப்பவர்களை பிரமிக்க வைத்தது. மேலும் வைகை ஆறு மட்டுமின்றி ஏவி மேம்பாலம், கல்பாலம், பிடிஆர் பாலம், வைகை கரையின் வட, தென்பகுதி என எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளமாகவே காட்சியளித்தது. வைகையில் அழகர் இறங்குவதற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது. இந்த தண்ணீர் நேற்றுமுன்தினம் காலையிலேயே மதுரைக்கு வந்து அழகரை காண்பவர்களுடன் தன்னையும் இணைத்துக்கொண்டது. இந்த தண்ணீருக்குள் நின்றபடி அழகரை தரிசிக்க பக்தகோடி பெருமக்கள் குழந்தை, குட்டிகளுடன் காத்துக்கொண்டிருந்தனர். கோடானு கோடி கண்கள் அழகர் பாதையையே பார்த்துக்கொண்டிருக்க வான வெடி சத்தத்துடன் காலை 5.50மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி பக்தர்களின் வெள்ளத்தில் வைகை ஆற்றுக்குள் இறங்கினார் அழகர். இதை திரண்டு இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா என்ற கோஷத்துடன் அழகரை தரிசித்தனர். ஏராளமானோர் செம்புகளில் இனிப்பை வைத்து சூடம் ஏற்றி அழகரை நோக்கி பூஜை செய்தனர்.
வைகை ஆற்றுக்குள் இறங்கிய அழகரை வீரராகவ பெருமாள் பந்தலுக்குள் இருந்து வெளியே வந்து வரவேற்றார். பின்னர் அழகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பூஜை முடிந்ததும் ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த பந்தலை மூன்று முறை சுற்றிவந்து நாலாபக்கமும் திரண்டு இருந்த பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 7.05 மணிக்கு வைகை ஆற்றுக்குள் இருந்து அழகர் புறப்பட்டார். வைகை கரையோரம் உள்ள திருக்கண்களில் அழகர் எழுந்தருளி விட்டு 12 மணிக்கு ராமராயர் மண்டகப்படிக்கு வந்தார். அங்கு அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் தீர்த்தவாரிக்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கையில் தண்ணீர் பையுடன் காத்திருந்தனர். அவர்கள் அழகரின் முகத்தை பார்த்ததும் பரவசம் அடைந்து அழகரை நோக்கி தண்ணீரை நோக்கி பீய்ச்சி அடித்தனர். இதன் பின்னர் மதியம் 2 மணிக்கு இங்கிருந்து புறப்பட்ட அழகர் அண்ணாநகர் வழியாக இரவு வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலை அடைந்தார். இங்கு விடிய,விடிய பக்தர்கள் திரண்டு வந்து அழகரை வழிபட்டனர். இன்று காலை 7 மணிக்கு அழகர் கருட வாகத்தில் எழுந்தருளி பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளி வைகை ஆற்றுக்குள் உள்ள தேனூர் மண்டபகப்படிக்கு வருகிறார். இங்கு சேஷவாகனத்தில் எழுந்தருளி மண்டூகமுனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். இங்கிருந்து மதியம் 3 மணிக்கு புறப்படும் அழகர் பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளிவிட்டு இரவு 10 மணிக்கு ராமராயர்மண்டகப்படிக்கு வருகிறார். இங்கு விடிய, விடிய தசாவதாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளைமறுநாள் காலை மோகினி அவதாரத்தில் அழகர் புறப்படுகிறார். அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியான நேற்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மதுரை போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர், டிஐஜி பாலநாகதேவி, எஸ்பி அஸ்ராகார்க், நகர் போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் 22 உதவி கமிஷனர்கள், 40 இன்ஸ்பெக்டர்கள், 300 எஸ்ஐக்கள் உள்பட 5 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வைகை ஆறு, கோரிப்பாளையம் உள்ளிட்ட 9 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கூட்டத்தை கண்காணித்தனர். மொத்தத்தில் இதுவரை எந்த வருடமும் இல்லாத அளவிவிற்கு இந்த வருடம் கூட்டம் அதிகம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
-----
டிசி பாக்ஸ்
--------
மாவட்ட நிர்வாகம்- மாநகராட்சிக்கு
பொதுமக்கள் பாராட்டு
அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள் என்பதற்காக கடந்த சில நாட்களாக கலெக்டர் சகாயம், மேயர் ராஜன்செல்லப்பா, போலீஸ்கமிஷனர் சஞ்சய்மாத்தூர், எஸ்பி அஸ்ராகார்க் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை எந்த குறையும் இன்றி செய்து கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் சகாயம், மேயர் ராஜன்செல்லப்பா ஆகியோர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தனர். இந்த தீவிர நடவடிக்கையால் நேற்று பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் முழுமையாக செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக எங்கு பார்த்தாலும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. இதே போல போலீசாரின் தீவிர நடவடிக்கையால் ஒரு சிறு அசம்பாவிதம் கூட இன்றி பக்தர்கள் மகிழ்ச்சியாக அழகரை தரித்து விட்டு ஊர் திரும்பினர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.
-----
பச்சை பட்டில் அழகர்
நாடு செழுமை அடையும்
வைகை ஆற்றுக்குள் இறங்கும் அழகர் என்ன கலர் பட்டு உடுத்தி இறங்க போகிறார் என பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துஏ இருந்தனர். அழகர் வைகை ஆற்றுக்குள் இறங்கியதும் அழகரின் முகத்தை தரிசித்த பக்தர்கள் அடுத்து அவர் என்ன பட்டு உடுத்தி இருக்கிறார் என ஆவலுடன் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர். நேற்று வைகை ஆற்றில் இறங்கிய அழகர் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார். பச்சை பட்டு செழுமையை தரும். நாடு சுபீட்சம் பெரும். விவசாயம் செழிக்கும் என தெரிவித்தனர்.
---
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.