முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் பா.ஜ.வில் வசுந்தரா உள்பட 30 எம்.எல்.ஏ.க்கள் விலகல்?

திங்கட்கிழமை, 7 மே 2012      இந்தியா
Image Unavailable

ஜெய்பூர்,மே.- 7 - ராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா கட்சியில் உள்கட்சி பூசல் வெடித்துள்ளது. இதனால் மூத்த தலைவர் வசுந்தரா உள்பட 30 எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. ராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா தலைவர் கத்தாரியாவுக்கும் வசுந்த்ர ராஜே சிந்தியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கட்சி பிளவுபடும் நிலைக்கு சென்றுள்ளது. ஜெய்பூரில் நடந்த பா.ஜ.க.ஆலோசனைக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் யாத்திரை செல்லப்போவதாக கத்தாரியா அறிவித்திருந்தார். ஆனால் இதில் தொண்டர்களுக்கு விருப்பம் இல்லை என்று வசுந்த்ரா ராஜே சிந்தியா கூறினார். இதில் இருபிரிவினர்களுக்கும் சலசலப்பு ஏற்பட்டு கட்சி கூட்டத்தில் இருந்து வெளியேறிய வசுந்த்ரா, கட்சிப்பதவிகளில் இருந்து விலகப்போவதாக அறிவித்தார். அவரை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் 30 எம்.எல்.ஏ.க்களும் தாங்களும் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தனர். இதனால் கத்தாரியா தமது யாத்திரை முடிவை கைவிடப்போவதாக அறிவித்தார். இருந்தபோதிலும் பிரச்சினை ஓயவில்லை. அடுத்து நடைபெறக்கூடிய சட்டபேரவை தேர்தலில் வசுந்த்ரா ராஜே சிந்தியாதான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை முன்வைத்து ராஜினாமா செய்யப்போவதாக கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூறிவரும் நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணையினர் ராஜினாமா செய்துவிட்டனர். ராஜஸ்தான் மாநில பா.ஜ.காவை பொறுத்தவரை முன்னாள் முதல்வர் வசுந்த்ரா ராஜே சிந்தியா மட்டுமே தலைவர், முதல்வர் வேட்பாளர் என்பதே அவரது ஆதரவாளர்களின் முழக்கம். இதற்கு கத்தாரியா தலைமையிலான குழுவினர் குடைச்சல் கொடுக்கவே கட்சியே பிளவு படும் நிலைக்கு போய்விட்டது. கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பாவும் சதானந்த கவுடாவும் முறைத்துக்கொண்டியிருக்கும் நிலையில் ராஜஸ்தானிலும் இந்த நிலைமை தொடர்கதையாகிவிட்டது பா.ஜ.விற்கு ஒரு குழப்பமான சூழ்நிலையாக இருக்கிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்