முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகார துஷ்பிரயோகம்: பஞ்சாப் அமைச்சருக்கு ஓராண்டுசிறை

திங்கட்கிழமை, 7 மே 2012      அரசியல்
Image Unavailable

சண்டிகர், மே - 7 - அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பஞ்சாப் மாநில வேளாண்மைத்துறை அமைச்சர் தோடாசிங்குக்கு ஓராண்டு சிறைத்தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது. பஞ்சாப் வேளாண்மைத்துறை அமைச்சர் தோடாசிங் மீது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது, வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்தது போன்ற  வழக்குகள் தொடரப்பட்டன.  இதில் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் அமைச்சர் தோடாசிங்குக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும்,  ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் விடுவிக்கப்பட்டார். அமைச்சர் அபராதத்தைக் கட்டவில்லையெனில் மேலும் 6 மாதங்கள் அவர் சிறையிலிருக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டது. ஆனால் அமைச்சர் உடனடியாக அபராதத் தொகையைக் கட்டிவிட்டார். இதைத் தொடர்ந்து ஜாமீன் கோரி மேல் முறையீடு செய்ய அவரை நீதிமன்றம் அனுமதித்தது. பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் அமைச்சரவையில் பதவிவகித்த  ஜாஹிர் கவுர்,  மகளை கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து  தற்போது 2-வது அமைச்சராக தோடாசிங் சிறைக்குப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்