Idhayam Matrimony

ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து இன்று ஹிலாரியுடன் கிருஷ்ணா ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 8 மே 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மே - 8 - ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள், அரசியல் தீர்வு குறித்த பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரியிடம் இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆலோசனை நடத்த இருக்கிறார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்தியா வந்துள்ளார். இன்று அவர் டெல்லி வருகிறார். பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.கிருஷ்ணாவை அவர் சந்தித்து ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து முக்கியமாக பேசுவார் என்று தெரிகிறது. ஐநா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. அதை இந்தியாவும் ஆதரித்தது. இருப்பினும் அதன்பின் இலங்கையை சமரசப்படுத்தும் வேலைகளில் இந்தியா தீவிர அக்கறை காட்டி வருகிறது. இந்த நிலையில் ஹிலாரி கிளிண்டனிடம் இலங்கை விவகாரம் குறித்து கிருஷ்ணா பேசவுள்ளார். அப்போது இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள், அரசியல் தீர்வு குறித்த பிரச்சினை உள்ளிட்டவை குறித்து கிருஷ்ணா விளக்குவார் என்று தெரிகிறது. ஹிலாரியுடன் இன்று ஈழத்தமிழர் விவகாரம் குறித்து கிருஷ்ணா பேசுவார் என்று இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்