முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைஞன் பெண்ணாக மாற ஆபரேஷனுக்கு கோர்ட்டு அனுமதி

செவ்வாய்க்கிழமை, 8 மே 2012      இந்தியா
Image Unavailable

மும்பை,மே.- 8 - இளைஞன் ஒருவன் பெண்ணாக மாற (பாலியல்) அறுவை சிகிச்சை செய்து கொள்ள மும்பை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.  அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியை சேர்ந்த மாணவன் பைதான் பாரூவா என்பவர், தாம் பெண்ணாக மாற விரும்புவதாகவும் இதற்காக பாலியல் அறுவை சிகிச்சை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரி மும்பை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்தமனுவை விசாரித்த கோர்ட்டு, அந்த இளைஞன், பெண்ணாக மாற அறுவை சிகிச்சை அளிக்க அனுமதி அளித்துள்ளது. ஒரு இளைஞனோ அல்லது இளம் பெண்ணோ, தனது வாழ்க்கை தொடர்பாக ஒரு முடிவு எடுத்துக்கொள்ள தடுக்க எந்தவித சட்டமும் இல்லை. மேலும் அந்த இளைஞன் பாலியல் அறுவை சிகிச்சை செய்துகொள்ள மத்திய அரசோ அல்லது மாநில அரசோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேலும் பாலியல் அறுவை சிகிச்சை செய்துகொள்வதை தடுக்க எந்தவித சட்டமும் இல்லை. மனுதாரருக்கு தற்போது 21 வயதாகிறது. அதனால் அவர் ஒரு வயது வந்தவர். அதன் அந்த இளைஞன் தன் விருப்பப்படி எந்த முடிவையும் எடுக்கலாம் என்று ஐகோர்ட்டின் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் எஸ்.ஜெ.வஜிப்தர், ஏ.ஆர்.ஜோஷி ஆகியோர் அளித்துள்ள தீர்ப்பில் கூறியுள்ளனர். மத்திய அரசு, மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அத்வைத் சேத்னா, மது கஜாலே ஆகியோரும் இளைஞன் பாலியல் அறுவை சிகிச்சை செய்து கொள்ள எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இனி உலகில் நடப்பதெல்லாம் விநோதமாகத்தான் இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்