முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூப்பல்லக்கில் மலையை நோக்கி புறப்பட்டார் அழகர்

புதன்கிழமை, 9 மே 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,மே.9 - பூபல்லக்கில் எழுந்தருளி மலையை நோக்கி நேற்று நள்ளிரவு மலையை நோக்கி புறப்பட்டார் அழகர். உலக பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்று அழகர்கோவில் சித்திரை திருவிழா. இந்த திருவிழா கடந்த 4ம் தேதி துவங்கியது அன்று மாலை அழகர் கள்ளழகர் வேடம் பூண்டு மதுரை நோக்கி புறப்பட்டார். ஒவ்வொரு திருக்கண்களிலும் எழுந்தருளிவிட்டு மூன்றுமாவடி, புதூர் பகுதிக்கு வந்த அழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பிறகு தல்லாகுளம் பிரசன்னவெங்கடாஜலபதி கோவிலில் எழுந்தருளிய அழகரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசித்தனர். இதன் பிறகு தல்லாகுளம் கருப்பணசுவாமி கோவிலுக்கு வந்த அழகர் அங்கு தங்ககுதிரையில் எழுந்தருளி நேற்று முன்தினம் காலை வைகை ஆற்றுக்குள் இறங்கினார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.

இதன் பிறகு வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலுக்கு சென்ற அழகர்  சேஷவாகனத்தில் எழுந்தருளி பல்வேறு திருக்கண்களுக்கு சென்றுவிட்டு, வைகை ஆற்றுக்குள் உள்ள தேனூர் மண்டபத்திற்கு வந்தார். இங்கு நேற்று மதியம் கருட வாகனத்தில் எழுந்தருளிய அழகர் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார். ஆற்றுக்குள் இருந்து புறப்பட்ட அழகர் பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளிவிட்டு இரவு 10.30 மணிக்கு ராமராயர் மண்டகப்படிக்கு வந்தார். இங்கு விடிய,விடிய அழகரின் தசாவாதரம் நடைபெற்றது. முத்தங்கி சேவை, மச்சவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகினி அவதாரங்களில் தோன்றி அழகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதன் பிறகு நேற்று காலை அழகர் தல்லாகுளம்  கருப்பணசாமி கோவிலுக்கு சென்றார். அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து அழகரை வழியனுப்ப காத்திருந்தனர். நள்ளிரவு 2 மணி அளவில் அழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி மலையை நோக்கி புறப்பட்டார். பூப்பல்லக்கில் எழுந்தருளிய அழகரை ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசித்து வழியனுப்பி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்