முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஏக்கர் நிலம் தராத கருணாநிதிக்கு ஓட்டு போடலாமா? விஜயகாந்த்

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருவண்ணாமலை, மார்ச்.29 - திருவண்ணாமலையில் அ.தி.மு.க. வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து நேற்று (28-ந்தேதி) மாலை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். காந்தி சிலை அருகே நடந்த இந்த கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது-

இந்த தொகுதி தி.மு.க. வேட்பாளர் எ.வ.வேலு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் அவர் நல்லவர் மாதிரி பேசுகிறார். அ.தி.மு.க.வில் இருந்து எம்.எல்.ஏ.வான அவர் ப.உ.சண்முகத்துக்கே அரசியல் சொல்லிக் கொடுத்தவன் என கூறிக் கொள்கிறார். கருணாநிதி வீட்டுக்கு எடுபிடி வேலை செய்யும் எ.வ.வேலு இங்கிருந்து தான் பொருட்களை வாங்கி கருணாநிதி வீட்டுக்கு கொடுத்து அனுப்புகிறார்.

எம்.ஜி.ஆரிடம் பிச்சை வாங்கி வந்த தண்டராம்பட்டு வேலு, எம்.ஜி.ஆர். கொண்டுவந்த சத்துணவில் சத்து இல்லை என்று சொல்கிறார். உனக்கு இந்த அந்தஸ்தை யார் தந்தது? பஸ் டைம் கீப்பராகவும், கண்டக்டராகவும் இருந்த நீ இப்போது பெரிய மந்திரி. இதுதான் உழைப்பால் முன்னேறியதா? மக்களை ஏமாற்றி மந்திரி ஆக்கி உள்ளீர்கள். திருவண்ணாமலை போலீஸ் டி.எஸ்.பி. வீரராகவன் எ.வ.வேலுவுக்காக தனது ஜீப்பில் பணம், புடவை, கடத்திச் செல்வதாக தகவல் வந்துள்ளது. எனவே உடனடியாக தேர்தல் ஆணையம் அவரை மாற்ற வேண்டும்.

தி.மு.க. தலைவர்களிடம் கோடிகளில் பணம் உள்ளது. எனக்கு கோடிக்கணக்கான மனசு, இதயம் உள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் அழகிரி கொடுக்க முன்வந்தார் என்றார்கள். நான் ஏமாந்தேனா? இல்லை நான் மாறினேனா? எ.வ.வேலு கல்லூரியில் ரேஷன் அரிசி கடத்துகிறார்கள் என்று பா.ம.க. ஊடகங்களில் செய்தி வந்தது.  செய்தியாளர்கள் மீது வழக்கு தொடர்ந்தார்கள். வழக்கு இன்னும் முடியவில்லை. ஆனால் அதே பா.ம.க. தான் இன்றைக்கு வேலு இருக்கிற தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது. திருவண்ணாமலை மண்ணில் இருந்து சொல்லுகிறேன். ஈஸ்வரர் உங்களை அழித்து விடுவார்.

எடுபிடி வேலை பிச்சாண்டிக்கு தெரியாது என்பதால் எ.வ.வேலு அவரிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவியை தட்டிப் பறித்துவிட்டார். 2 ஏக்கர் இலவச நிலம் தருவதாக சொல்லி ஏமாற்றிய தி.மு.க.வுக்கு ஓட்டு போடலாமா? தி.மு.க. ஆட்சியில் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைத்ததா? கருணாநிதி பிறந்தநாளில் ஓட்டல்களில் 20 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப்படும் என அறிவித்த எ.வ.வேலு வழங்கினாரா? கட்டுமரம் போல் இருப்பேன் கவிழ்ந்து விட மாட்டேன் என கூறும் கருணாநிதி இன்று மக்களை கவிழ்த்து ஸ்பெக்ட்ரம் மூலம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி கொள்ளை அடித்துள்ளார். இதனால் தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் ராஜா ஜெயிலில் இருக்கிறார். தி.மு.க.வின் கொள்கையே இப்போது ஜெயிலில் உள்ளது.

5 முறை முதலமைச்சராக இருந்துள்ளேன். 6-வது முறையாக முதலமைச்சராக ஆக்குங்கள் என கருணாநிதி கூறுகிறார். 5 முறை முதலமைச்சராக இருந்ததற்கே தமிழ் சமுதாயத்தை இலங்கையில் குழி தோண்டி புதைத்து விட்டீர்கள். 6-வது முறை முதலமைச்சராகி யாருக்கு குழி தோண்டப் போகிறீர்கள்? கொள்ளையடிப்பவர்களின் சரணாலயமாக, நாட்டு மக்களை ஏமாற்றுபவர்களின் சரணாலயமாக தி.மு.க. உள்ளது. இப்போது தமிழ்நாட்டுக்கு உடனடி தேவை தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவது தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago