முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நித்யானந்தாவை நீக்கும் வரை போராட்டம்: இந்து மக்கள் கட்சி

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,மே.13 - நித்யானந்தாவை நீக்கும் வரை போராட்டம் தொடரும், மதுரை ஆதீனத்துக்குள் புகுந்து வழிபாடு நடத்துவோம் என இந்துமக்கள்கட்சி அறிவித்துள்ளது. மதுரையில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜீன் சம்பத், மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் நெல்லை கண்ணன், பாரதீய பார்வர்டு பிளாக் முருகன் ஆகியோர் நேற்று கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:

 மதுரை ஆதீனத்திடம், இளைய ஆதீனமாக பட்டம் சூட்டுவதற்கு மதுரை மடத்தில் தான் விழா நடத்தி இருக்கவேண்டும். பெங்களூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களை தேர்வு செய்தது ஏன்? மதுரை ஆதீனமாக இருக்க நித்யானந்தா தயாராக இல்லை. பிடதிஆசிரமத்தில் இருக்கதான் விரும்புகிறார். இது மிகப்பெரிய கேடாகும்.

 இது தொடர்பாக நாளை வேளங்குறிச்சி ஆதீனம், செங்கோல் ஆதீனம் மற்றும் சமுதாய தலைவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். பின்னர் இன்று மதியம் மதுரை ஆதீன மடத்துக்குள் புகுந்து வழிபாடு செய்வோம். நித்யானந்தாவை நீக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்