முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாதிபேதமற்ற உள்ளார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும்-சபாநாயகர்

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மே - 14 - ஜாதிபேதமற்ற உள்ளார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று லோக்சபா சபாநாயகர் மீராகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாராளுமன்றத்தின் 60 ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு லோக்சபையின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் லோக்சபா சபாநாயகர் மீராகுமார் பேசினார். தங்களது பங்களிப்பின் மூலம் ஜனநாயக அமைப்புகளை தொடர்ந்து உயிரோட்டத்துடன் வைத்திருக்கும் இந்நாட்டின் கோடிக்கணக்கான  ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இதர முகம் தெரியாத மக்கள் அனைவருக்கும் எனது வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மீரா குமார் கூறினார். வகுப்புவாதமும், ஜனநாயகமும் ஒரே பாதையில் செல்ல முடியாது. எனவே நாட்டில் ஜாதிபேதமற்ற உள்ளார்ந்த சமூகம் ஒன்றை உருவாக்க லோக்சபை உறுப்பினர்கள் அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த நாட்டின் ஜனநாயகம் அர்த்தமுள்ளது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் நாட்டின் வளர்ச்சிக் கனிகள் கடைக்கோடி ஏழைகளுக்கும் சென்றடைய வேண்டும் என்றும்  அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago