முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெருமைமிக்க சாதனைகளுக்கு ஜனநாயக ஈடுபாடே காரணம்

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மே - 14 - நாட்டின் பெருமைக்குரிய சாதனைகளுக்கு ஜனநாயகத்தின் மீது இந்தியா கொண்டுள்ள ஈடுபாடே காரணம் என்று பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தின் 60 வது ஆண்டுவிழாவை முன்னிட்டு ராஜ்யசபையில் நேற்று சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 60 வது ஆண்டுவிழா தொடர்பான விவாதத்தை துவக்கிவைத்து பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். அப்போது அவர் கூறுகையில், நாட்டின் பெருமைக்குரிய சாதனைகளுக்கு ஜனநாயகத்தின் மீது இந்தியா காட்டிவரும் அக்கறையே காரணம் என்றார். இந்த சாதனைகள் இந்திய மாநிலங்களுக்கும் இந்திய மக்களுக்கும் உரியவை என்றும் அவர் கூறினார். பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது சமீப ஆண்டுகளில் இந்திய மக்கள் தொடர்ச்சியாகவும் முறையாகவும் நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்கள், பஞ்சாயத்து தேர்தல்கள் ஆகியவற்றில் நாட்டு மக்கள் அதிக அளவில் ஓட்டளித்து வருகின்றனர். இது ஜனநாயகத்தின்பால் அவர்களுக்கு அதிக நம்பிக்கை இருப்பதையே வெளிப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார். நமது சமூக மற்றும் பொருளாதார மீட்சியை அடைவதற்காக ஜனநாயகத்தின் மீது அளவற்ற நம்பிக்கையை இந்திய மக்கள் வைத்திருப்பதால்தான் நாம் இந்த அளவுக்கு உலகத்தில் ஒரு முக்கியமான இடத்திற்கு முன்னேறிச் சென்றிருக்கிறோம் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தின் மேலவை மிக முக்கியமான ஜனநாயக பணிகளை ஆற்றி வருகிறது. நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு அது ஒரு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது என்றும் அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்