முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வேட்பாளர் ஏ.கே.போஸ் ஓட்டுசேகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, மார்ச் 29 - மதுரை வடக்கு தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளர் ஏ.கே.போஸ் வீடு வீடாகச் சென்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் தொகுதி முழுவதும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். பின்னர் புதூர், ஜவகர்புரம் ஆகிய இடங்களில் வீதி, வீதியாகச் சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் கட்சி நிர்வாகிகள் திரளாக சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனைதத் தொடர்ந்து மதுரை மாநகர் 4-வது வட்டம் புதூர் அருகே உள்ள அந்தனேரியில் ஏ.கே.போஸ் நேற்று காலை பிரசாரம் செய்தார். வீதி,வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் வீடு வீடாகச் சென்று இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பொதுமக்களிடையே பேசிய ஏ.கே.போஸ், அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தால் தடை இல்லாத மின்சாரம் கிடைக்கும். விலைவாசி உயர்வு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும். இந்த பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் செய்து தரப்படும். ரவுடிகளின் ராஜ்ஜியம் ஒழிக்கப்படும், தாலி செயின் பறிப்பு, களவு, திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் இந்த பகுதியில் நடைபெறாவண்ணம் ஜெயலலிதா ஆட்சி அமைந்தவுடன் முற்றிலுமாக ஒழிக்கப்படும். இதற்கு உறுதுணையாக செயல்பட்டு வரும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். 

பிரச்சாரத்தின்போது அ.தி.மு.க.வேட்பாளர் ஏ.கே.போஸுடன் அவைத்தலைவர் துரைப்பாண்டியன், எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணைசெயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மகளிரணி செயலாளர் பெ.இந்திராணி, பகுதி செயலாளர் அண்ணாநகர் எம்.என்.முருகன், தொகுதி செயலாளர் எம்.ரவிச்சந்திரன், தொகுதி இணைச் செயலாளர் வக்கீல் ஏ.பி.பாலசுப்பிரமணி, மாவட்ட பேரவை துணைத் தலைவரும் 4-வது வட்ட தேர்தல் பொறுப்பாளருமான அபுதாகீர், வட்டச் செயலாளர்கள் கார்த்திக் முனியசாமி, புதூர் கே.என்.கண்ணன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் புதூர் சுந்தரா, மாநில பொதுக்குழு உறுப்பினர் அண்ணாநகர் முனியசாமி, வக்கீல் அசோகன், வடக்கு 1-ம் பகுதி பேரவைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மகளிரணி நிர்வாகிகள் புதூர் பாப்பா, தெய்வம் கணபதி, ஆர்.ஜோதி, எம்.கல்யாணி, பி.புஷ்பா, டி.ஜெயபாக்கியம், கவுசல்யா, பேச்சியம்மாள், அம்பிகா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்