முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ் இனத்தையே அழித்தவர் கருணாநிதி - ஜெயலலிதா ஆவேசம்

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

தஞ்சாவூர், மார்.29 - இலங்கையில் தமிழர்களை சிங்கள ராணுவத்திற்கு காட்டிக்கொடுத்து தமிழ் இனத்தையே அழித்தவர் கருணாநிதி என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். சர்வாதிகாரி ஆட்சிக்கு எதிராக எகிப்தில் வெடித்த மக்கள் புரட்சியைப்போல் கருணாநிதி குடும்ப ஆட்சிக்கு எதிராக நீங்கள்ல் எல்லாம் இங்கே எழுச்சியுடன் கூடி இருக்கிறீர்கள். பிறரை வாழவைப்பவர்கள் தமிழர்கள். வாழவைத்த தமிழர்களை வஞ்சிப்பவர் கருணாநிதி என்றும் ஜெயலலிதா கூறினார். 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த பல நாட்களாக அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று தஞ்சாவூரில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- 

கச்சத்தீவை தாரை வார்த்தவர் கருணாநிதி. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தட்டிக் கேட்காதவர் கருணாநிதி. இலங்கையில்  லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்து அவர்களை அழித்தவர் கருணாநிதி. அவர் ஒரு இனத்துரோகி.  நதிநீர்ப் பிரச்சனைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை தாரை வார்த்தவர் கருணாநிதி. 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் மூலம் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியவர் கருணாநிதி. இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்தவர் கருணாநிதி. இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியவர் கருணாநிதி.

கற்காலத்திற்குச் சென்று கொண்டிருக்கும் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதியாகும். ஆட்சிக்கு வந்தவும் தமிழகத்தில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டப்படும். அனைவருக்கும் 20 கிலோ தரமான இலவச அரிசி வழங்கப்படும். தாய்மார்களுக்கு இலவச பேன், மிக்சி,கிரைண்டர் ாக வழங்கப்படும்.  பிளஸ்1, பிளஸ்2 பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் கம்ப்யூட்டர் வழங்கப்படும். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவியரும் இலவச லேப்டாப் பெற்றிட, 10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக 1000 முதல் 5000 ரூபாய் வரை உயர்த்தி தரப்படும். வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு 3 சென்ட் நிலம் அளிக்கப்படும். வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் 3 லட்சம் மக்களுக்கு 1,80,000 ரூபாய் செலவில் 300 சதுர அடியில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்.  முதியோர், ஊனமுற்றோர், ஆதரவற்றோருக்கான உதவித்தொகையை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்படும். கேபிள் தொழிலை அரசுடமையாக்கி அனைத்து மக்களுக்கும் அரசு கேபிள் டி.வி இணைப்பு குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். 60000 பால் கறவை மாடுகளை இலவசமாக 6000 கிராமங்களுக்கு அளிக்கப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். கரும்புக்கான கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு 2500 ரூபாயாக உயர்த்தப்படும். விவசாயிகளுக்கு இலவசமாக சொட்டு நீர் பாசன வசதி செய்து தரப்படும். விவசாயிகளுக்கு தரமான விதைகள் மற்றும் இடுபொருட்கள் தள்ளுபடி விலையில்  கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 10 லட்சம் அளவிற்கு வழங்கும் கடனில் 25 விழுக்காடு மானியம் அளிக்கப்படும்.  25 ஆயிரம் ரூபாய் திருமண உதவித் தொகையுடன் மணப்பெண்ணிற்கு திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும். 58 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அருகில் உள்ள பகுதிகளுக்கு அரசு பேருந்துகளில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் வழங்கப்ப்டும். தடையில்லா மின்சாரம் சப்ளை செய்யப்படும்.  வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் வீடுகளுக்கு சூரியஒளி மூலம் தடையில்லா  மின்சார வசதி இலவசமாக வழங்கப்படும். தமிழகம் எங்கும் உள்ள குடிநீர் பிரச்சனைகள் தீர, அண்டை மாநிலங்களுடனான  நதிநீர்ப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.  கட்டுக்கடங்காமல் ஏறியுள்ள விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவரப்படும்.  குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை மேம்படுத்தப்படும். சாலை இல்லாத ஊர்களுக்கு  சாலை வசதி செய்து தரப்படும். போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தப்படும். கடந்த 5 ஆண்டுகால மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் கடுமையாக பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் மீனவர்கள் ஆகிய உழைக்கும் மக்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பினையும் உறுதி செய்யப்படும். தொழில் வளம் பெருகவும், தொழில் அமைதியை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியக்குழு முரண்பாடுகள் களையப்படும். சத்துணவு ஊழியர்களின்  கோரிக்கைகளை நிறைவேற்றப்படும்,  பாதாள சாக்கடைத்திட்டங்களை விரைந்து நிறைவேற்றிட, கருவறை முதல் கல்லறை வரை பயனளிக்கக்கூடிய உழவர் பாதுகாப்புத்திட்டத்தினை புதுப்பொலிவுடன் மீண்டும் செயல்படுத்திட, நடைமுறையில் உள்ள மக்களுக்குப் பயன் அளிக்கும் திட்டங்களைத்தொடர்ந்து செயல்படுத்திட, நடைமுறையில் உள்ள மக்களுக்குப் பயன் அளிக்கும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திட, ஒரு குடும்பத்தின் பிடியில் உள்ள தமிழ்நாட்டில் மக்களை மீட்டிட, கருணாநிதி குடும்பத்தினர் உட்பட தி.மு.கவினரால் ஏழை எளிய மக்களிடமிருந்து மிரட்டிவாங்கப்பட்ட சொத்துக்களை மீட்டு உரியவர்களியம் திருப்பிக் கொடுத்திட, ஒரு ரவுடிக் கும்பல் தமிழக மக்களை அடக்கி ஆள்வதற்கு முற்றுப்புள்ளி வைத்திட அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியை ஆதரிக்கவேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago