எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் 29 - மைலாப்பூர் தொகுதியில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயந்தி தங்கபாலுவின் மனுவை ஆவணங்கள் சரி இல்லை என்று கூறி தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார். ஆனால் நேற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்திருந்த தங்கபாலு மனுவை ஏற்றுக்கொண்டதாக அறிவித்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்த விபரம் வருமாறு:-
வேட்பு மனுக்கள் நேற்று பரிசீலிக்கப்பட்டன. மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட மனுதாக்கல் செய்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலுவின் மனைவி ஜெயந்தியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அத்தொகுதியில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.
தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 13-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. 26-ந் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. வேட்புமனுக்கள் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் அனைத்து வேட்பு மனுக்களும் பரிசீலிக்கப்பட்டன. சென்னையில் மயிலாப்பூர் தொகுதிக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை திருவல்லிக்கேணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மயிலாப்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக கே.வி.தங்கபாலு மநு தாக்கல் செய்தார். இத்தொகுதியில் நேற்று வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. காங்கிரஸ் வேட்பாளர் ஜெயந்தியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்த மயிலை சிவகாமி, தேர்தல் அதிகாரி இன்னொசென்ட் திவ்யாவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அந்த புகார் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:-
மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள ஜெயந்தி, தேர்தல் அதிகாரி முன் தாக்கல் செய்துள்ள வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் பல்வேறு உண்மைகளையும், தகவல்களையும் வேண்டுமென்றே மறைத்துள்ளார். சென்னையில் இருந்து வெளிபரப்பாகும் மெகா டி.வி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ஜெயந்தி உள்ளார் என்று கே.வி.தங்கபாலுவே பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்த தகவலை தனது பிரமாண பத்திரத்தில் ஜெயந்தி மறைத்து விட்டார்.
ஜெயந்தி நிர்வாக இயக்குநராக உள்ள மெகா டி.வி. நிறுவனத்தில் தங்கபாலு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பங்குகள் உள்ளன. இந்த தகவல்களும் வேட்புமனுவில் குறிப்பிடப்படவில்லை. மெகா டி.வி. நிறுவனர், நிர்வாக இயக்குநர் ஜெயந்திக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்னொரு டி.வி. நிறுவனம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதேபோல், எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முன் மெகா டி.வி.க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் தங்கபாலுவுக்கு சொந்தமான தங்கவேல் பொறியியல் கல்லூரி உள்ளது. அந்த பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான சொத்துக்களின் மதிப்பு ரூ.600 கோடி ஆகும். அந்த கல்லூரியின் அதிகாரப்பூர்வமான இணையதளத்திலேயே இது சம்பந்தப்பட்ட விவரங்கள் உள்ளன. இந்த விவரங்களையும் ஜெயந்தி தனது பிரமாண பத்திரத்தில் மறைத்து விட்டார். தவறான தகவல்களையும் கொடுத்து வேண்டுமென்றே உண்மைகளை மறைத்து ஜெயந்தி வேட்புமனு தாக்கல் செய்திருப்பது வாக்காளர்களை ஏமாற்றுவதாகும். ஆகவே, அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் மயிலை சிவகாமி குறிப்பிட்டிருந்தார்.
மயிலாப்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தவர்களின் மனுக்கள் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. தேர்தல் அதிகாரி இன்னொசென்ட் திவ்யா வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தார். இதையொட்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, தி.மு.க. பகுதி செயலாளர் த.வேலு இருவரும் வந்தனர். வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரி இன்னொசென்ட் திவ்யா பரிசீலனை செய்தார். காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார். மாற்று வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த தங்கபாலுவின் மனு ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
வேட்புமனு பரிசீலனை முடிந்ததும் கே.வி.தங்கபாலு வெளியில் வந்தார். அப்போது நிருபர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு தங்கபாலு பதில் அளிக்க மறுத்து விட்டார். இப்போது நான் எதுவும் சொல்ல மாட்டேன், மீண்டும் வருவேன், அப்போது நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன் என்றார். நிருபர்கள் விடவில்லை. தொடர்ந்து கேள்வி மேல் கேள்வி எழுப்பினர். வேறு வழியில்லாமல் தங்கபாலு பதில் அளிக்க தொடங்கினார்.
அவர் கூறியதாவது:-
எனது மனைவி ஜெயந்தி மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். 4 ஆவணங்கள் சரியாக பூர்த்தி செய்யப்பட்டு தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தி.மு.க. பகுதி செயலாளர் த.வேலு, தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மங்கள்ராஜ், தென்சென்னை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் செயலாளர் இளஞ்செழியன், பா.ம.க. கவுன்சிலர் ஜமுனா ஆகியோரது முன்னிலையில் 4 ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன. 4 ஆவணங்களும் சரியாக இருப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், தாக்கல் செய்யப்பட்ட 4 ஆவணங்களில் 2 ஆவணங்களை காணவில்லை என்று கூறுகிறார்கள். 2 ஆவணங்களில் கையெழுத்து போடவில்லை என்று கூறுகிறார்கள். மாற்று வேட்பாளராக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை ஏற்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஆகவே, மயிலாப்பூரில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுவது உறுதி. தேர்தல் கமிஷனின் குறைபாடுகளை வன்மையாக கண்டிக்கிறேன். இது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் எனது மனைவி ஜெயந்தி புகார் கொடுக்க இருக்கிறார். எனது மனைவி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அப்பட்டமான பொய். அவர் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை, எந்த வழக்கும் தொடரப்படவில்லை, எந்த வழக்கும் நிலுவையிலும் இல்லை. இவ்வாறு தங்கபாலு கூறினார்.
தங்கபாலு காரில் ஏறி புறப்பட்டபோது, சுயேட்சை வேட்பாளர் மயிலை சிவகாமி தங்கபாலுவை எதிர்த்தும், அவரது மனைவி ஜெயந்தியை எதிர்த்தும் கோஷங்களை எழுப்பினார். அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு பதில் மாற்று வேட்பாளராக அந்த தொகுதியை சேர்ந்தவர்தான் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் தங்கபாலு மாற்று வேட்பாளராக தனது பெயரை அறிவித்துக் கொண்டதும், வேட்புமனு செய்ததும் கண்டிக்கத்தக்கது. கட்சி மேலிடத்தின் உத்தரவு இல்லாமல் தன்னிச்சையாக அவர் செயல்படுவதை ஏற்க முடியாது என்று மயிலை சிவகாசி கூறினார்.
தொடர்ந்து அவரும், அவரது ஆதரவாளர்களும் தங்கபாலுவுக்கு எதிராக கோஷம் எழுப்பியது அந்த இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆவேசம் அடைந்த தங்கபாலுவை சமாதானப்படுத்தி அவரது ஆதரவாளர்கள் அவரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு அடங்கியது. பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்ட போலீசார் அமைதியுடன் அங்கு நடந்த சம்பவங்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.
-
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும்: ராகுல் காந்தி
20 Apr 2024பாட்னா : அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும் என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.