எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவாரூர், மார்.- 30 - தோல்வி பயத்தால் வரும் சட்டமன்றத் தேர்தலில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட கருணாநிதி சதித் திட்டம் தீட்டியுள்ளார் என்று திருவாரூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். நேற்று செம்பனார்கோவில், திருவாரூர், புவனகிரி,கடலூர், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். திருவாரூரில் நடந்த பிரச்சாரத்தில் அ.தி.மு,க வேட்பாளர்கள் குடவாசல் ராஜேந்திரன், காமராஜ், ராஜநாயகம், உலகநாதன் ஆகியோர்களை ஆதரித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் பேசியதாவது, சர்வாதிகாரி ஆட்சிக்கு எதிராக எகிப்தில் வெடித்த மக்கள் புரட்சியைப்போல் கருணாநிதி குடும்ப ஆட்சிக்கு எதிராக நீங்கல் எல்லாம் இங்கே எழுச்சியுடன் கூடி இருக்கிறீர்கள். பிறரை வாழவைப்பவர்கள் தமிழர்கள். வாழவைத்த தமிழர்களை வஞ்சிப்பவர் கருணாநிதி.
கச்சத்தீவை தாரை வார்த்தவர் கருணாநிதி. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தட்டிக் கேட்காதவர் கருணாநிதி. லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்து அவர்களை அழித்தவர் கருணாநிதி. நதிநீர்ப் பிரச்சனைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை தாரை வார்த்தவர் கருணாநிதி. 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் மூலம் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியவர் கருணாநிதி. இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்தவர் கருணாநிதி. இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறார் கருணாநிதி.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் ரூ.1.80 லட்சம் கோடி ரூபாய். இந்த ஊழல் பணத்தை முதலீடு செய்து அதன்மூலம் சம்பாதித்த பணம் 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை வைத்து பெரம்பலூர் மாவட்டத்தில் 1000 ஏக்கருக்கும் மேலான நிலம் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவால் வாங்கப்பட்டது. யாரிடம் இருந்து வாங்கப்பட்டது தெரியுமா? ஏழை எளிய மக்களாகிய உங்களிடமிருந்து வாங்கப்பட்டது. ஒரு ஏக்கர் நிலம் 60 ஆயிரம் ரூபாய். இவ்வாறு வாங்கப்பட்ட நிலம் ஒரு சில மாதங்களில் பெரிய கம்பெனிகளுக்கு விற்கப்பட்டுவிட்டது. விற்கப்பட்ட விலை ஒரு ஏக்கர் 18 லட்சம் ரூபாய்.அதாவது ஆறு கோடி ரூபாய் கொடுத்து கொடுத்து ஏழை மக்களிடம் வாங்கப்பட்ட நிலம் 180 கோடிக்கு விற்கப்பட்டு இருக்கிறது. ஒரு மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நிலம்வாங்கி விற்றதில் லாபம் 174 கோடி. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் இதே நிலைமைதான். இதன்மூலம் மட்டும் லட்சக்கணக்கான கோடி ரூபாயை கருணாநிதி குடும்பத்தினர் சுருட்டிவிட்டனர்.
ஒரு ஏக்கர் நிலத்தை வெறும் 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற ஏழை மக்களால் அந்த பணத்தை வைத்து ஒரு கிரவுண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. அந்த அளவுக்கு நிலத்தின் மதிப்பு உயர்ந்துவிட்டது. இதுதான் ஊழலின் உச்சக்கட்டம். இந்த விலையேற்றத்திற்கு கருணாநிதி குடும்பத்தினர்தான் காரணம். நிலத்தின் விலை மட்டுமல்ல. அனைத்துப் பொருட்களின் விலை ஏற்றத்திற்கும் கருணாநிதி குடும்பத்தினர்தான் காரணம். தற்போதைய விலைவாசி உயர்வு என்பது இயற்கையானது அல்லது. கருணாநிதி குடும்பத்தினரால் செயற்கையாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் மணல் கொள்ளை தமிழகம் முழுவதும் அமோகமாக நடைபெற்றது. இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மணல் கொள்ளை மூலம் 50 ஆயிரம் கோடி, கிரானைட் கொள்ளை மூலம் ரூ.80 ஆயிரம் கோடி என கருணாநிதி குடும்பத்தினர் நாட்டை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர்.
காலாவதியான மருந்து விநியோகம என பலவழிகளில் கருணாநிதி குடும்பத்திற்கு பணம் சென்று கொண்டே இருக்கிறது. அனைத்து அரசுத் திட்டங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. 1971 முதல் 1976ஆம் ஆண்டு வரை கருணாநிதி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற வீராணம் ஊழலில் உயிரை மாய்த்துக் கொண்டவர் காண்ட்ராக்டர் சத்யநாராயணா ரெட்டி. 1989 முதல் 91ஆம் ஆண்டு வரை கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவருடன் நெருக்கமாக இருந்த டி.ஜி.பி துரை மர்மமான முறையில் இறந்தார். 1996 முதல் 2001ம் ஆண்டுவரை கருணாநிதி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மேம்பால ஊழலில் உயிரை மாய்த்துக் கொண்டவர் சென்னையைச் சேர்ந்த ரமேஷ். இந்த முறை ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக சாதிக் பாட்சாவின் உயிர் பறிக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்படுமோ? கொள்ளையடிப்பது கருணாநிதி குடும்பம். பலியாவது உங்களில் ஒருவர். கபடநாடகங்கள் மூலம் மக்களை ஏமாற்ற நினைக்கிறார் கருணாநிதி.
மத்திய அரசில் அங்கம் வகித்தும் அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப பிரச்சனைகளை தீர்க்க கருணாநிதிக்கு வக்கில்லை. காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்தாரா கருணாநிதி? கர்நாடக அரசோ மேட்டூர் அணையில் நீர் எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது. கர்நாடக அரசின் இந்த செயலையும் தட்டிக் கேட்கவில்லை. இவற்றிற்கு காரணம் கர்நாடகத்திலிருந்து வரும் தன் குடும்ப வருமானம் பாதிக்கப்பட்டுவிடும் என்பதுதான். இப்படி தன் மக்களுக்காக உழைக்கின்ற கருணாநிதி ஆட்சி அதிகாரம் தன்னைவிட்டு போய்விடுமோ என்று தமிழக மக்களுக்காக உழைக்க தன்னை தேர்ந்தெடுக்குமாறும், தமிழ் னத்தை பாதுகாக்க தன்னை மீண்டும் தேர்ந்தெடுக்குமாறும் பேசிவருகிறார். ஊழல் செய்வதில் மட்டுமல்ல மக்களை ஏமாற்றுவதிலும் வல்லவர் கருணாநிதி.
கருணாநிதியை இப்படியே விட்டுவிட்டால் தமிழக மக்களை விரட்டிவிட்டு தமிழகத்தையே தன் குடும்ப வசம் ஆக்கிக் கொள்வார். உங்களை விரட்ட நினைக்கும் கருணாநிதியை நீங்கள் விரட்டி அடிக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் அதற்கு ஒரே வழி தேர்தல்தான். இதைப் பயன்படுத்தி நீங்கள் கருணாநிதியை குடும்பத்தோடு அப்புறப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டின் எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்க்கை பாதுகாப்பாகவும், செழுமையாகவும், பிரகாசமாகவும் விளங்க அனைவரும் விழிப்புடனும், எழுச்சியுடனும் ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்க வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். ஜனநாயக கடமையை ஆற்றி தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் திருவாரூரில் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். கூத்தாநல்லூர் தனித் தாலுகாவாக அறிவிக்கப்படும். அங்குதரைப்பாலம் அமைக்கப்படும். திருவாரூரில் பதிவாளர் அலுவலகம் அமைக்கப்படும். இந்தத் தேர்தலில் தி.மு.க வீழ்வது உறுதி. தேர்தலுக்கு முன்பே கருணாநிதி அ.தி.மு.கவிற்கு எதிராக சதித் திட்டங்கள் தீட்டினார். ஆனால் அவை எடுபடவில்லை. ஆட்சியை தக்க வைப்பதற்காக சதித் திட்டங்களை தீட்டினார். உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் அனுமதியாகி அனுதாபத்தைப் பெறவும், அந்த அனுதாபம் வெற்றி பெறவில்லை என்றால் வன்முறையை கட்டவிழ்த்துவிட சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
தி.மு.க.வின் வன்முறைக்கு இடம் கொடுக்காமல் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்,
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.