முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகாசி விசாகம்: திருச்செந்தூரில் நடைதிறப்பு நேரம் மாற்றம்

திங்கட்கிழமை, 28 மே 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருச்செந்தூர், மே. - 27 - திருச்செந்தூரில் ஜூன் 3 ம் தேதி வைகாசி விசாகத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு திருக்கோவில் நடை திறக்கப்படுகிறது.  வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருக்கோவிலில் நடை திறப்பு நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஜூன் 3 ம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்படுகிறது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு நடை திறப்பு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 3 ம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு ஒன்றரை மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகின்றன. இதே போல் ஜூன் 2 மற்றும் 4 தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதை தொடர்ந்து மற்ற பூஜைகளும் நடைபெறவுள்ளன. விழா ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்