எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.29 - சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அதிமுகவும் ,பல்வேறு அமைப்புகளும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன. கடந்த 23ந்தேதி பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தியது. இதையடுத்து தமிழகத்தில் பெட்ரோல்டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவையான அளவிற்கு வினியோகம் செய்யப்படாததால் இருப்பு இருக்கும் வரை விற்பனை செய்து விட்டு பங்க்குகளை உரிமையாளர்கள் மூடிவிடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் டீசல் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மற்ற மாவட்டங்களை விட தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. பெரும்பாலான பங்க்குகள் மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். தட்டுப்பாடு குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் ஆகிய 3 எண்ணை நிறுவனங்களின் அதிகாரிகள் வாய்திறக்க வில்லை.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இன்று 6 வது நாளாக நீடிக்கிறது. இன்னும் எத்தனை நாளுக்கு இந்த பிரச்சினை இருக்கும் என்று தெரிய வில்லை. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பங்க்குகளுக்கு பெட்ரோல்டீசல் வினியோகம் செய்யப்பட வில்லை. இதனால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும்பாலான பங்க்குகள் மூடப்பட்டன.
மற்ற இடங்களை விட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. சென்னையில் மட்டும் யூரோ4 வகை டீசல் வினியோகம் செய்யப்படுகிறது. மற்ற மாவட்டங்களுக்கு யூரோ 3 வகை சப்ளை செய்யப்படுகிறது.
யூரோ3 வகை டீசல் சென்னையில் விற்க தடை உள்ளது. இந்த வகை டீசலால் காற்று அதிகம் மாசுபடும். யூரோ 4 வகை டீசல் சென்னையில் வினியோகம் செய்யப்படாததால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எண்ணை நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படாததால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியன் ஆயில் நிறுவனம் தரப்பில் கூறும் போது, எங்கள் நிறுவனத்தின் மூலம் வழக்கமாக வினியோகம் செய்யப்படும் அளவு பெட்ரோல்டீசல் சப்ளை செய்யப்படுகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. மற்ற எண்ணை நிறுவனங்கள் பற்றி எங்களுக்கு தெரியாது.ஐ.ஓ.சி. பங்க்குகளுக்கு எப்போதும் போல் வினியோகம் செய்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டது. பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டிற்கான உண்மையான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை. நிலைமை சீராக இன்னும் 3 நாட்கள் ஆகும் என்று தெரிகிறது.
இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஜெயலலிதா அறிவிப்பு:-
கடும் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா முன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் 50 காசு என்ற அளவிற்கு கடுமையாக உயர்த்தி இருக்கிறது. இது வரலாற்றில் எப்பொழுதுமே நிகழ்ந்திராத ஓர் அடாத செயல். இந்தக் கடும் விலை உயர்வினைக் கண்டித்து ஏற்கெனவே நான் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தேன். இந்த விலை உயர்வை நாடே கடுமையாக எதிர்க்கிறது.
இன்று நிலவுகின்ற பொருளாதார சூழலில் இவ்வளவு கடுமையான விலை உயர்வை மக்களால் தாங்க இயலாது என்பதால், இந்த விலை உயர்வை முற்றிலும் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால், திமுக அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. மக்கள் உணர்வுகளை மதிக்கின்ற ஜனநாயகப் பண்பு இல்லாத அரசாக உள்ளது. மத்திய அரசை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியோ, மத்திய அரசை வலியுறுத்தி இந்தப் பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், பெட்ரோல் விலையை குறைக்கக் கோரி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் என்று அறிவித்து இருப்பது, பாலுக்கும் காவல், னைக்கும் தோழன் என்ற பழமொழியைத் தான் நினைவுபடுத்துகிறது. தி.மு.கவின் இந்த நடவடிக்கை ஒரு கண் துடைப்பு நாடகம் தான் என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல், சரிந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல், பண வீக்கத்தை கட்டுப்படுத்தாமல், கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் 50 காசு என்ற அளவிற்கு உயர்த்தி மக்களை பெருத்த இன்னலுக்கு ஆளாக்கியுள்ள மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசைக் கண்டித்தும், இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், கழக அமைப்பு ரீதியான 52 மாவட்டத் தலைநகரங்களிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பும், செவ்வாய்க் கிழமை இன்று காலை 11 மணி அளவில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். கழக அமைப்பு ரீதியான 52 மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகளும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என்று அறிவித்துள்ளார். அதன்படி மாவட்டத் தலைநகரங்களில் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டங்களை நடத்த அ.தி.மு.க. அமைப்பினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.