முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருஞானசம்பந்தர் பூஜைக்கு அனுமதி மறுத்தால் போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 29 மே 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருவாரூர், மே 29 - மதுரை ஆதீனத்தில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழாவை நடத்த அனுமதி மறுத்தால் தடையை மீறி உள்ளே நுழைவோம் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், திருமுறை என்பது தமிழுக்கும், சைவத்துக்கும்  ஏற்றம் தரக்கூடிய முக்கிய நிகழ்வு. திருவாரூரில் நடைபெறும் திருமுறைப் பேரணி அரசியல் சாராத பண்பாடு சார்ந்த கலாச்சார நிகழ்வு.  ஜூன் 5 ம் தேதி திருஞான சம்பந்தர் குருபூஜை நடைபெற உள்ளது. அன்றைய தினம் மதுரை ஆதீன மடத்துக்குள் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் சென்று வழிபாடு செய்து தேவாரம் பாடவுள்ளோம். அரசிடம் இதற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி மறுத்தால் தடையை மீறி ஆதீனத்திற்குள் நுழைந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். 

திருவாரூரில் நடைபெறும் சேக்கிழார் கல்விப் பண்பாட்டுக் கழக 5 வது மாநில மாநாட்டில் சைவ, வைணவ கல்வியை தமிழகத்தில் பாடமாகக் கற்பிக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது என்றார் அர்ஜுன்சம்பத்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்