முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரத்திக்கு பணம்: அமைச்சர் தமிழரசி மீது வழக்கு பதிவு

புதன்கிழமை, 30 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

மானாமதுரை, மார்ச் - 30 - ஆரத்திக்கு பணம் கொடுத்ததாக மானாமதுரை சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் தமிழரசி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள . மானாமதுரை தொகுதி தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுபவர் அமைச்சர் தமிழரசி. இவர் நேற்று திருபுவனம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பாகுடி, வடகரை, ஏனாதி பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஏனாதியில் ஆரத்தி எடுத்த பெண்ணின் தட்டில் 5000 ரூபாயை போட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த பறக்கும்படை எஸ்.ஐ. முத்துவிஜயன் உடனடியாக விரைந்து சென்று பணத்தை பறிமுதல் செய்ததோடு தமிழரசி மீது வழக்கு பதிவும் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்