LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூன்.1 - ஐந்தாவது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள தமிழக வீரர் விசுவநாதன் ஆனந்துக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் கடந்த மே 11-ம் தேதி துவங்கியது. 12 சுற்று ஆட்டங்கள் கொண்ட இப்போட்டியில் இந்திய செஸ் வீரரும், நடப்பு உலக சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்தும் இஸ்ரேலைச் சேர்ந்த போரிஸ் கெல்பாண்டும் விளையாடினர். இப்போட்டியில் நடைபெற்ற முதல் ஆறு சுற்றுப் போட்டிகளும் டிராவில் முடிவடைந்தன.
7வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவினார். எட்டாவது சுற்று ஆட்டத்தில் சுதாரித்துக் கொண்ட விஸ்வநாதன் ஆனந்த் கெல்பாண்டை வீழ்த்தி இப்போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்திருந்தார். இதனையடுத்து நடைபெற்ற 9, 10, 11, 12 வது சுற்று ஆட்டங்கள் டிரா ஆகின. இருவரும் தலா 6 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இந்த கடைசி சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்ததால் டை பிரேக்கிங் ஆட்டம் நடத்தப்பட்டது. இதில் அதிவேக ரேபிட் முறையில் 4 ஆட்டங்கள் நடக்கும். ஒவ்வொரு வீரருக்கும் 25 நிமிடங்கள் வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு காய் நகர்த்தலுக்கும் கூடுதலாக 10 வினாடிகள் அளிக்கப்படும்.
ரேபிட் முறையின் முதல் ஆட்டம் 32 வது நகர்த்தலில் டிரா ஆனது. ரேபிட் முறையின் இரண்டாவது ஆட்டத்தில் அதிவேகமாக விளையாடிய விஸ்வநாதன் ஆனந்த் 77-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மூன்றாவது ஆட்டத்தில் இருவரும் திறமையாக ஆடியதால் 35-வது நகர்த்தலில் டிரா ஆனது. இதனையடுத்து நடைபெற்ற ரேபிட் முறையின் நான்காவது சுற்று ஆட்டத்தில் அதிவேக ஆட்டத்தை வெளிப்படுத்திய விஸ்வநாதன் ஆனந்த் 56 வது நகர்த்தலில் ஆட்டத்தை டிராவில் முடித்தார். இதன் மூலம் ரேபிட் முறை ஆட்டங்களில் 2. 1/2 11/2 என்ற கணக்கில் கெல்பாண்டை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த் 5 வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அதுமட்டுமின்றி நடப்புச் சாம்பியன் பட்டத்தையும் தக்கவைத்துக் கொண்டார்.
கடந்த 2000, 2007, 2008 மற்றும் 2010 என நான்கு முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை விஸ்வநாதன் ஆனந்த் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஜெயலலிதா பாராட்டு: 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆனந்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விசுவநாதன் ஆனந்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
5-வது முறையாகவும், தொடர்ந்து 4-வது முறையாகவும் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை nullநீங்கள் வென்றிருக்கிறீர்கள். என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். பரபரப்பு நிறைந்த அதிவேக ராபிட் சுற்று டை பிரேக்கர் போட்டிக்கு பிறகு உங்கள் திறமையை நிரூபித்து இந்த பட்டத்தை nullநீங்கள் வென்றிருக்கிறீர்கள். இதன் மூலம் இந்தியா மற்றும் தமிழகத்திற்கு nullநீங்கள் பெருமை தேடித் தந்துள்ளீர்கள்.
இந்த மகத்தான வெற்றிக்காக உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல ஆண்டுகளுக்கு இந்த பட்டத்தை nullங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென வாழ்த்துகிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
வாழ்த்துக்கள் குவிகிறது: உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த்துக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.
பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உங்களது இந்த மிகப்பெரிய சாதனையின் மூலம் நாட்டுக்கு பெருமை சேர்த்து இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஆனந்த் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
தமிழக கவர்னர் ரோசைய்யா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:-
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் நம் நாடும், நாட்டு மக்களும் பெருமைப்பட வைத்திருக்கிறீர்கள். தொடர்ந்து பல சாதனைகள் பெற வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய விளையாட்டு அமைச்சர் அஜய்மக்கான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ஆனந்த் இந்த நாட்டின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர். அவர் மீண்டும் தனது சாதனையை நிலை நிறுத்தி இருக்கிறார் என்றார்.
ஆனந்த்தின் சிறந்த முயற்சியால் இந்த சாதனை படைக்க முடிந்ததாக இந்திய டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா வாழ்த்தியுள்ளார். இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் சூர்ய சேகர் கங்குலி கூறுகையில், 180 நாடுகள் பங்கேற்கும் செஸ் விளையாட்டில் ரஷியா தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அதை ஆனந்த் முறியடித்து விளையாட்டு உலகின் முடிசூடா மன்னாக திகழ்கிறார் என்றார்.
ஆனந்த்துக்கு பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் உள்பட பல்வேறு மாநில முதல்அமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலக சாதனை படைத்த ஆனந்த்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று இந்திய செஸ் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இந்திய விளையாட்டு ஆர்வலர்கள் கூறும்போது, தெண்டுல்கர் வரவால் கிரிக்கெட் தான் இந்தியாவின் நம்பர் ஒன் விளையாட்டாக இருக்கிறது. அதே சமயம் ஆனந்த் உலக அளவில் நம் நாட்டின் புகழை நிலைநிறுத்தி உள்ளார். ஆனந்த் 5 முறை இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் பெற்றுக்கொடுத்துள்ளார் அவரது சாதனையால் இந்தியர்ளாகிய நாம் பெருமைப்படுகிறோம். தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறார்கள். இப்போதைய நிலையில் பாரத ரத்னா விருதுக்கு ஆனந்த் தான் தகுதியானவர். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க சிபாரிசு செய்ய வேண்டும் என்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
Devil Eggs.![]() 1 day 26 sec ago |
பொரி உப்புமா![]() 5 days 20 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 23 hours ago |
-
2023 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை : சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியீடு
17 Aug 2022லண்டன் : 2023-27 ஆண்டுகளுக்கான ஆடவர் கிரிக்கெட் அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.
-
குறைந்த காற்றின் வேகம் குறைந்தது: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியில் கடும் பின்னடைவு
17 Aug 2022சென்னை : குறைந்த காற்றின் வேகம் குறைந்ததால் தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 18-08-2022.
18 Aug 2022 -
உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி எடுங்கள் : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
17 Aug 2022டெல்லி : உலகக்கோப்பை கால்பந்து இந்தியாவில் நடத்த முயற்சி எடுங்கள் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
-
காருண்யா பல்கலைக்கழகத்துக்கு உயர்தர அங்கீகாரம்: நாக் கமிட்டி
17 Aug 2022கோவை : காருண்யா பல்கலைக்கழகத்துக்கு உயர்தர அங்கீகாரம் நாக் கமிட்டி வழங்கியது.
-
ஆப்கன் மசூதி குண்டுவெடிப்பு: 30 பேர் பலி - பலர் படுகாயம்
18 Aug 2022காபூல்: ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 30 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர்.
-
செஸ் போட்டி: முதல் சுற்றில் தமிழக வீரர் குகேஷ் வெற்றி
17 Aug 2022சென்னை : டர்கிஷ் செஸ் சூப்பர் லீக் போட்டியில் விளையாடி வரும் குகேஷ் முதல் சுற்றில் வெற்றியடைந்துள்ளார்.
-
பயணிகள் கொரோனா நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் : விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ உத்தரவு
17 Aug 2022புதுடெல்லி : கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
-
3 போட்டிகள் கொண்ட தொடர் ஆரம்பம்: முதல் ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா - ஜிம்பாப்வே பலப்பரீட்சை
17 Aug 2022ஹாராரே : இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
-
தமிழக - கேரள எல்லையில் 2 நாட்களாக தேடப்பட்ட காட்டு யானை சிக்கியது
17 Aug 2022கோவை : தமிழக - கேரள எல்லையில் 2 நாட்களாக தேடப்பட்ட காட்டு யானையை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
-
கவுதம் அதானிக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசு ஒப்புதல்
17 Aug 2022மும்பை : தொழிலதிபர் கவுதம் அதானிக்கு சிஆர்பிஎப் கமாண்டோக்கள் மூலம் இசட் பிரிவு விஐபி பாதுகாப்பு வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
இரு உலகக் கோப்பைகளை வெல்ல ரஸ்ஸல் விருப்பம்
17 Aug 2022சமீபத்திய மே.இ. தீவுகள் அணியின் வெள்ளைப் பந்து ஆட்டங்களில் பிரபல வீரர் ரஸ்ஸல் இடம்பெறவில்லை.
-
மனக்கசப்பை தூக்கி எறிந்து அ.தி.மு.க. ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். அழைப்பு
18 Aug 2022சென்னை: மனக்கசப்பை தூக்கி எறிந்துவிட்டு அ.தி.மு.க. ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் என்று இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். அழைப்பு விடுத்துள்ளார்.
-
ஈரோடு, கருமுட்டை விற்பனை வழக்கு: நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது மாவட்ட கலெக்டர் உத்தரவு
18 Aug 2022ஈரோடு: ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
-
ஆர்டர்லி முறை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள்: தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி..க்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு
18 Aug 2022சென்னை: ஆர்டர்லி முறை ஒழிக்க அரசு மற்றும் டி.ஜி.பி. எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு: கனடா செல்லும் சபாநாயகருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
18 Aug 2022சென்னை: கனடாவில் நடைபெறவிருக்கும் 65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்க உள்ளார்.
-
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இ.பி.எஸ். தரப்பு அப்பீல்
18 Aug 2022சென்னை : கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இ.பி.எஸ்.
-
ஓ.பி.எஸ்.சுடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை அழைப்பை ஏற்க இ.பி.எஸ். மறுப்பு
18 Aug 2022சென்னை: ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
18 Aug 2022திருவனந்தபுரம்: ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது என கேரள நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.
-
பேருந்துகளில் பெண்களை முறைத்து பார்க்கும் ஆண்களை இறக்கிவிடலாம் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்
18 Aug 2022சென்னை: முறைத்துப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை நடத்துநர்கள் இறக்கிவிடலாம் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
-
தேசத்தின் லட்சியத்தை அடைய நாம், நம்மை அர்ப்பணிப்போம் கவர்னர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
18 Aug 2022சென்னை: தேசத்தின் லட்சியத்தை அடைய நாம், நம்மை அர்ப்பணிப்போம் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்தாக தெரிவித்துள்ளார்.
-
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: ஐந்து பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
18 Aug 2022விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
-
3.5 கி.மீ. நீளம் - 295 பெட்டிகள்... வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில்
18 Aug 2022சத்தீஸ்கர்: 3.5 கி.மீ. நீளம் - 295 பெட்டிகள் கொண்ட இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
-
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
18 Aug 2022சென்னை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்
-
கொரோனா பேரிடரால் ஜப்பானில் 2 வருடங்களில் 8 ஆயிரம் பேர் தற்கொலை
18 Aug 2022டோக்யோ: கொரோனா பேரிடர் காரணமாக பாதிப்புக்குள்ளான பல்வேறு விஷயங்களில், மனித வாழ்க்கையும் ஒன்றாக மாறிவிட்டது.