முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கபாலுவின் சுயநலத்தால் தேர்தலை புறக்கணிக்கிறோம் இளங்கோவன் பேரவை முடிவு

புதன்கிழமை, 30 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.- 30 - காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவின் சுயநலத்தால்  தேர்தலை புறக்கணிக்கப்போவதாக இளங்கோவன் பேரவை அறிவித்துள்ளது.     மதுரை மாநகர், புறநகர் மாவட்ட ஈவி.கே.எஸ்.இளங்கோவன் பேரவை கூட்டம் நேற்று நடந்தது. வக்கீல் நீதிராஜாராம் தலைமை வகித்தார். சுந்தரபாண்டியன், சண்முகசுந்தரம், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட குழுவில் இளங்கோவனை சேர்க்காதது கண்டிக்கத்தக்கது, தங்கபாலுவின் எடுபிடிகளுக்கும், சோம்பேறிகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டதையும், மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் காங்கிரஸ் இயக்கத்தின் உண்மை தொண்டர்களிடம் பாராமுகம் காட்டி வருவதையும் கண்டித்தும், இந்த சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்யப்படுகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்