முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி அருகே காதல் திருமண மோதல்: வாலிபர் கொலை

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

பழனி, ஜூன்.3 - பழனி அருகே மானூரில் காதல் திருமணம் தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டார். கார், வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. மானூரைச் சேர்ந்த காதலர்கள் சங்கிலித்துரை(27), வாசுகி தேவி(21). இவர்கள் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து இரு குடும்பத்தினரும் பேச்சு வார்த்தை நடத்த தீர்மானித்தனர். ஆனால் அந்த நாளில் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுடன் வெளியூர் சென்று விட்டனர். இதனால் ஏமாற்றமடைந்த பெண் வீட்டார் மாப்பிள்ளையின் உறவினரிடம் விசாரித்தனர். இதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாப்பிள்ளை வீட்டாரின் உறவினர் ராஜசேகரனை பெண் வீட்டார் கத்தியில் குத்தினர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜசேகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து மாப்பிள்ளை வீட்டார் கடைகளையும்  அடித்து நொறுக்கி வீடுகளுக்கு தீ வைத்தனர். டி.எஸ்.பி. குப்புராஜ் தாக்கப்பட்டார். போலீஸ் ஜீப் கண்ணாடிகள் உடைக்கப்பட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இது தொடர்பாக காசிலிங்கம்(53), மகுடீஸ்வரன்(41), கண்ணன்(32), அஞ்சலா தேவி(42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மானூரில் மேலும் கலவரங்கள் ஏற்படாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்