முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.எல்.ஏ., வீட்டில் வெடிகுண்டு உரிய நேரத்தில் கண்டுபிடிப்பு

திங்கட்கிழமை, 4 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

இம்பால், ஜூன்.- 4 - மணிப்பூர் எம்.எல்.ஏ., இல்லத்தில் தீவிரவாதிகள் வைத்திருந்த குண்டு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அந்த குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. மணிப்பூரில் எம்.எல்.ஏ., வாக இருப்பவர் ஷியாம்குமார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவரது இல்லத்தில் நுழைவு வாயிலில் மொபைல் போனில் சக்தி வாய்ந்த குண்டு இணைக்கப்பட்டு கதவில் வைக்கப்பட்டிருந்தது. இதை அந்த உள்ளூர்வாசிகள் தற்செயலாக பார்த்துவிட்டனர். இதுபற்றி அவர்கள் எல்லை பாதுகாப்பு படைக்கு தெரிவிக்க அவர்கள் அது பற்றி அருகிலுள்ள காவல் துறையினருக்கு தெரிவித்தனர். உடனடியாக காவல்துறையினர் எம்.எல்.ஏ., வீட்டிற்கு விரைந்து கதவில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டை கண்டுபிடித்து உரிய நேரத்தில் செயலிழக்கச் செய்ததாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. குண்டு தக்க சமயத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் எம்.எல்.ஏ., அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்