முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள்நலனில் சிந்தனை உள்ளவர் முதல்வர் ஜெயலலிதா-சரத்குமார்

திங்கட்கிழமை, 4 ஜூன் 2012      சினிமா
Image Unavailable

புதுக்கோட்டை, ஜூன்.- 4 - மக்கள் நலனில் சிந்தனை உள்ளவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்று புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதிரித்து நடிகர் சரத்குமார் பேசினார். புதுக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 12-ம் நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆதரித்து முக்கிய தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 10ம் தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடியும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதனைதொடர்ந்து சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் எம்.எல்.ஏ கறம்பக்குடி ஒன்றியம் வெட்டன்விடுதியில் பிரச்சாரம் தொடங்கி கோட்டைக்காடு, புதுப்பட்டி, சூறக்காடு, பெரியன் விடுதி, வானக்கண்காடு ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளரை ஆதிரித்து திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அங்கு கூடியிருந்த மக்கள் அவருக்கு  சிறப்பான வரவேற்பு அளித்தனர். எம்.எல்.ஏக்கள் வாளாஜா, ராஜேந்திரன், மற்றும் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் அதிமுக ஒன்றிய வட்ட, கழக செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக புதுக்கோட்டையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த சரத்குமார் கூறியதாவது, அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி நல்லிணக்கத்துடன் பணியாற்றி வருகிறது. புதுக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவை நாங்கள் ஆதரிக்கிறோம். எதிர்கட்சி தலைவர் சட்டசபைக்கு வந்து மக்கள் பிரச்சனைகளை முறையாக பேசி செயல்படவேண்டும். எதிர்கட்சியாக செயல் படக்கூடாது. இத்தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்று சொல்லும் கட்சிகள் அதற்கான காரணத்தை சொல்லவில்லை. பிறந்தநாள் விழாவை கொண்டாடுகின்றனர். மக்கள் பிரச்சனையை மக்கள் மன்றத்தில் தான் பேசவேண்டும். தமிழக முதல்வர் மக்கள் நலனில் சிந்தனை உள்ளவர். ஆகையால் அவரை நாங்கள் ஆதரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்