முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வை விமர்சிக்க ராகுலுக்கு தகுதியில்லை-சதானந்த கவுடா

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

மங்களூர், ஜூன். - 5 - பா.ஜ.க. அரசை விமர்சிக்க ராகுல் காந்திக்கு தகுதி இல்லை என்று கர்நாடக மாநில முதல்வர் சதானந்த கவுடா தெரிவித்தார். மங்களூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது, கர்நாடகத்தில் ஊழல் நிறைந்த ஆட்சியை பா.ஜ.க நடத்துவதாக ராகுல் காந்தி பேசியுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பலர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி உள்ளனர். ஊழல் பற்றி பேசுவதாக இருந்தால் மத்திய அமைச்சர்கள் பற்றி ராகுல் பேசட்டும். ஒரு மாதத்திற்கு முன்பு சோனியா வந்தார். இப்போது ராகுல் வந்திருக்கிறார். அரசியல் நாடகங்களுக்காகவே இருவரும் கர்நாடகம் வந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் மீது மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. கர்நாடகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பதால் ராகுல் காந்திக்கு எந்த பலனும் இல்லை. காங்கிரசில் உயர் தலைவர்களுக்கு உரிய கவுரவம் கிடைக்கவில்லை. கர்நாடக பா.ஜ.க.வில் எந்த குழப்பமும் இல்லை. சட்ட மேலவை தேர்தலில் எல்லா தலைவர்களும் கூட்டாக பிரச்சாரம் செய்து வருகிறோம். சட்ட மேலவை தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெறும். பாக்கு இறக்குமதி அதிகரித்துள்ளதால் கர்நாடக மாநில விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாக்கு இறக்குமதியை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்