முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி ஊழல்: ஜே.பி.சி. அறிக்கை 6 மாதங்களில் தாக்கலாகிறது

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2012      ஊழல்
Image Unavailable

திருச்சூர், ஜூன். - 5 - 2 ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின்(ஜே.பி.சி.) அறிக்கை இன்னும் 6 மாதத்தில் தாக்கல் செய்யப்படும் என்று ஜே.பி.சி. தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான சாக்கோ கூறியுள்ளார். கேரள மாநிலத்தில் தனது தொகுதியான திருச்சூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது, 2 ஜி முறைகேடு தொடர்பான ஜே.பி.சி.யின் அறிக்கை வரும் டிசம்பர் மாதத்தில் தாக்கல் செய்யப்படும். அத்துடன் ஜே.பி.சி.யின் நீட்டிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைகிறது. இனிமேல் காலக்கெடு நீட்டிப்பு கேட்க மாட்டோம். இப்போதைய நிலையில் 50 சதவீதத்திற்கும் மேலான பணிகள் முடிந்து விட்டன. மீதமுள்ள பணிகளையும் விரைவில் முடித்து விடுவோம். இதுவரை 50 சாட்சிகளை விசாரித்துள்ளோம். ஜே.பி.சி.யின் அடுத்த கூட்டம் விரைவில் நடைபெறும். அதில் முன்னாள், இப்போதைய அமைச்சர்கள் ஜே.பி.சி. முன் ஆஜராக சம்மன் அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்