முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை தேர்தல்பணிகள் குறித்து பிரவீன்குமார் கலெக்டருடன் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

புதுக்கோட்டை. ஜூன்.- 5 - புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள தேர்தல் பணிகள் குறித்து தலைமைத் தேர்தல் அலுவலர் பிரவீன்குமார், மாவட்ட கலெக்டர் வ.கலைஅரசி அவர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலையொட்டி 224 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகள் தயார்நிலை குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலை குறித்தும், 1095 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி, வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குச்சீட்டுப்பொருத்துதல், nullத் சிலிப் வழங்குதல், புதிதாகச் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்குகள், தேர்தல் நடத்தை நெறிமுறைகளை 100 சதவீதம் அமுல்படுத்துதல் உள்ளிட்ட தேர்தல் பணிகள் குறித்து தலைமைத் தேர்தல் அலுவலர் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது சிறப்புத் தலைமைத் தேர்தல் அலுவலர் டி.இராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் க.நாகராசன், தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.முத்துமாரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சி.சொக்கன், தேர்தல் வட்டாட்சியர் கே.வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்