முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகத்தில் காங்.ஆட்சியை பிடிக்க தொண்டர்களுக்கு ராகுல்அழைப்பு

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

தாவணகெரே, ஜூன். - 5 - கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.  2 நாள் பயணமாக கர்நாடகம் சென்ற அவர், தாவணகெரே மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தை திறந்து வைத்து காங்கிரஸ் தலைவர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், 2008 ம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே காரணம். கட்சி நிறுத்திய வேட்பாளர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொண்டர்களே வேலை செய்தனர். இதனால் கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பை காங்கிரஸ் இழந்தது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை அமைப்பதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்.  கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி விட்டு கட்சியின் வெற்றிக்கு தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும். இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை 6 மாதங்களுக்கு முன்பே தீர்மானித்து அறிவித்து விட வேண்டும். 6 மாதங்களுக்கு முன்பிருந்தே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். மூத்தவர்கள், இளையோர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் இணைந்து கட்சியின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும் என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்