முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திமுக அரசை கண்டித்து மக்கள் தட்டிபோர்டு தேர்தல் புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்

புதன்கிழமை, 30 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

ராஜபாளையம்,மார்ச்.- 30 - ராஜபாளையம் அருகேயுள்ள மேலப்பாட்டம் ஊராட்சியில் எவ்வித அடிப்படை வசதியும் செய்து தராத திமுக அரசை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்ய பொதுமக்கள் தட்டிபோர்டு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலப்பாட்டம் கரிசல்குளம் ஊராட்சியில் உள்ள இந்திரா காலனி ஜேஜேநகர், பச்சைகாலனி பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதியும் செய்து கொடுக்காத திமுக அரசையும், திமுக அரசியல்வாதிகளையும், ஊராட்சித்தலைவரையும் கண்டித்து பொதுமக்கள் தட்டிபோர்டு வைத்து அறிவிப்பு வெளியிட்டு முற்றுகையிட்டனர். பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான சாலை வசதி குடிநீர், தெருவிளக்கு,சுடுகாட்டு பாதை போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தவறியதால் தேர்தல் புறக்கணிப்பு செய்ய முடிவு செய்து அறிவிப்பு பலகையை ஊர் எல்லையில் மாட்டியிருந்தனர். மேலப்பாட்டம் கரிசல்குளம் ஊராட்சி பொதுமக்கள் குழுமியிருந்து தட்டிப்போட்டு வைத்திருந்ததா அறிந்து தாசில்தார் ராஜபாளையம்,  இன்ஸ்பெக்டர் விஜயகுமார்,விஜயகாண்டீபன் ஆகியோர் பொதுமக்களிடம் சமரசம் பேசி தட்டிப்போர்டை அகற்ற வலியுறுத்தினர். 

பொதுமக்கள் தட்டிப்போர்டை அகற்ற மறுத்துவிட்டனர். மேலப்பாட்டம் பகுதியில் பெரும் பர..பரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்