முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரண்குமார், சிரஞ்சீவி மீது செருப்புவீச்சு காங். தொண்டர்கள் ஆத்திரம்

வியாழக்கிழமை, 7 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

நகரி, ஜூன். - 7 - ஆந்திராவில் ஒரு பாராளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 12 ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இதனால் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.  ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று கர்ணூல் மாவட்டம் எம்மிகலூரில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகர் சிரஞ்சீவி, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆகியோர் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தனர்.  அப்போது அங்கு கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் சிரஞ்சீவி பேச்சு கேட்கவில்லை என்று கூறி ஆத்திரமடைந்து சரமாரியாக செருப்புகளை வீசினர். அவற்றை சிரஞ்சீவி கையால் தடுத்தார். ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி மீதும் சில தொண்டர்கள் செருப்புகளை வீசினர். இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் அந்த இடத்தை விட்டு சென்று விட்டனர். இது குறித்து சிரஞ்சீவி கூறுகையில்,
தேர்தல் பிரச்சார நேரத்தில் போலீசார் தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இது போன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும் என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்