முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த போராட்டத்திற்கு தயாராகும் அன்னா ஹசாரே..!

வெள்ளிக்கிழமை, 8 ஜூன் 2012      ஊழல்
Image Unavailable

 

மும்பை, ஜுன் 8 - பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மீண்டும் போராட்டங்களை நடத்தப்போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.  ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். சமீபத்தில்கூட டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்திருக்கும் கறுப்புப்பணத்தை இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் அன்னா ஹசாரே ஆகியோர்  கூட்டாக ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். 

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மீண்டும் தனது போராட்டங்களை துவங்கப் போவதாக அன்னா ஹசாரே தெரிவித்தார். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு மத்திய அரசுக்கு எதிராக பிரச்சாரங்களை செய்துவரும் அன்னா ஹசாரே, இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயர்களை குறிப்பிட்டு தமது சொந்த ஊரான ராலேகான் சித்திக்கு கடிதங்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். மக்களுக்காக நல்ல திட்டங்களை தீட்ட வேண்டிய மத்திய அமைச்சர்கள் நிலங்களை வாங்கிக் குவிப்பதிலேயே ஆர்வமாக உள்ளனர் என்றார். ஊழல் காரணமாக அரிசிவிலை உயர்ந்துவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார். தமது தொடர் போராட்டங்களின் காரணமாகவே 6 ஊழல் மந்திரிகள் ஜெயிலுக்கு போனார்கள் என்றும் ஹசாரே தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்