முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரணமடைந்த நான்கு பேர் குடும்பத்தினருக்கு நிதியுதவி

வெள்ளிக்கிழமை, 8 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.8 - அரசு பேருந்து விபத்தில் மரணமடைந்த நடத்துனர் மற்றும் இரண்டு பெண்கள், குழந்தை ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், சிவரக்கோட்டை கிராமம் நான்கு வழிச் சாலையில் 6.6.2012  அன்று திருப்ரிலிருந்து திருநெல்வேலிக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில், பேருந்தில் பயணம் செய்த  திருநெல்வேலி மாவட்டம், பரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பரின் மனைவி சாந்தி, திருப்ரைச் சேர்ந்த சிவா என்பரின் மனைவி கிருஷ்ணவேணி, அவரின் மூன்று வயது குழந்தை ஸ்ரீதர் மற்றும் அப்பேருந்தின் நடத்துநர் விஜயன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இச்சாலை விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும், இத்துயரச் சம்பவத்தில் 15  நபர்கள் காயம் அடைந்துள்ளனர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், மதுரை மாவட்ட நிருவாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.  மேலும்,  இவர்கள் அனைவரும் விரைவில் ரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.         

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பேருந்தின் நடத்துநர் விஜயன் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாயும்,  சாந்தி,   கிருஷ்ணவேணி, குழந்தை ஸ்ரீதர் ஆகியோரின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/-​ ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 10,000/-​ ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்