எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரி, ஜூன்.- 9 - முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நேற்று முன்தினம் இரவு கார் மூலம் கடலூரில் இருந்து புதுவைக்கு வந்தார். கவர்னர் இக்பால்சிங் மற்றும் அரசு அதிகாரிகள் அவவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இரவு அவர் கவர்னர் மாளிகையில் தங்கினார். நேற்று காலை அவர் புதுவை மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரிக்கு சென்றார். அங்குள்ள மரபணு சோதனை மையத்தை அவர் பார்வையிட்டார். அதில் வைக்கப்பட்டு இருந்த மாணவர்களின் படைப்புகளை கண்டு வியந்து மகிழ்ந்தார். இதையடுத்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அப்துல்கலாம் பேசினார். அவர் பேசியதாவது:- சிறந்த மருத்துவம் என்பது மருத்துவ செலவை குறைப்பதாக இருக்க வேண்டும். எளிய முறையில் அனைவருக்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மருத்துவ வசதி கிடைக்க வேண்டும். மருத்துவ மாணவர்கள் முதலில் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். பின்னர் அதனை பிறருக்கு கற்பிக்க வேண்டும். அதன் பிறகு மீண்டும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். நோயாளி முழுமையாக குணமடையும் வரை சிகிச்சை அளிக்க வேண்டும். ஒருவேளை அதில் நோயாளிக்கு திருப்தி அளிக்காவிட்டால் மருத்துவ கட்டணம் வசூலிக்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார். பின்னர் மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகளுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது அப்துல்கலாமிடம் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:- கேள்வி: ஜனாதிபதி அப்துல் கலாமுக்கும், அப்துல் கலாமுக்கும் என்ன வேறுபாடு? பதில்: 50 ஆண்டுகள் தான் அப்துல்கலாமாக இருந்தேன். 5 ஆண்டுகள் ஜனாதிபதி அப்துல்கலாமாக பணிபுரிந்தேன். இந்த 5 ஆண்டுகளில் தான் 71/2 மில்லியன் இளைஞர்களை என்னால் சந்திக்க முடிந்தது. எனது பயணத்திற்காக கிடைத்த அதிநவீன போக்குவரத்து வசதிகளை இளைஞர்களை சந்திப்பதற்காக பயன்படுத்திக் கொண்டேன். அதன்மூலம் அப்தலுகலாமாக 50 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை 5 ஆண்டுகளில் சாதிக்க முடிந்தது. கேள்வி: நீங்கள் படிக்கும் காலத்திற்கும், இப்போதைய காலத்திற்கும் கல்வி முறையில் என்ன வேறுபாடு உள்ளது?
பதில்: கல்வி முறை என்பது எப்படி இருந்தாலும் ஆசிரியர்கள் தான் மாணவர்களின் எண்ணங்களை மாற்றுகின்றனர். ஆசிரியர்களால் தான் மாணவர்களிடம் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும்.
கேள்வி: அணுமின் உலை பற்றி உங்களுடைய கருத்து என்ன?
பதில்: ஜப்பான் புகுஷிமாவில் உள்ள அணுமின் உலை கடல் மட்டத்தை விட 2 மீட்டர் தான் உயரமாக உள்ளது. 91/2 மீட்டர் உயரத்துக்கு கடலில் சுனாமி அலை எழுந்த போது அந்த அணுமின் உலையை தாக்கியது. ஆனால் கூடங்குளம் அணுமின் உலை கடல் மட்டத்தை விட 151/2 மீட்டர் உயரத்தில் உள்ளது. எனவே அது பாதுகாப்பான நிலையில் இருக்கிறது.
கேள்வி: ஜனாதிபதியை மக்களே ஏன் நேரடியாக தேர்ந்தெடுக்க கூடாது?
பதில்: இந்தியாவில் 1950-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியமைப்பு சட்டத்தின் கீழ் தான் ஜனநாயக ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே அதனை மாற்ற வேண்டும் எனில் அரசியல் சட்ட நிபுணர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். பின்னர் அப்துல்கலாம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைய சூழலில் இளைஞர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும். அவர்களால் தான் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும். தேசநலனை மட்டுமே கருத்தில் கொண்டு இளைஞர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரிக்கு வந்த அப்துல்கலாமை மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் குணசேகரன், டீன் முத்துரங்கன், சேர்மன் ராஜகோபால் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
பிரியங்காவின் உதவியாளர் பா.ஜ.,வில் இணைந்தார்
20 Apr 2024புதுடில்லி: காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவின் நெருங்கிய உதவியாளர் தஜிந்தர் சிங், அக்கட்சியில் இருந்து விலகி, சில மணி நேரங்களிலேயே பா.ஜ.,வில் இணைந்தார்.
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும்: ராகுல் காந்தி
20 Apr 2024பாட்னா : அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும் என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.
-
சனாதனம் பற்றிய உதயநிதி பேச்சு: தெலுங்கானா முதல் கண்டனம்
20 Apr 2024ஐதராபாத், சனாதனம் பற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணியே இருக்காது: மகராஷ்டிராவில் பிரதமர் மோடி பேச்சு
20 Apr 2024மும்பை, தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி சரிந்து விழும்.
-
மகாவீர் ஜெயந்தியையொட்டி செல்வப்பெருந்தகை வாழ்த்து
20 Apr 2024சென்னை : மகாவீர் ஜெயந்தியையொட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வாக்குச்சாவடியில் விதிமீறல் ? நடிகர் விஜய் மீது புகார்
20 Apr 2024சென்னை, வாக்குச்சாவடியில் விதிமீறல்.? - த.வெ.க. தலைவர் விஜய் மீது புகார்
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.
-
மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
20 Apr 2024புது டெல்லி, மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள்
-
இட ஒதுக்கீட்டு கொள்கை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்து
20 Apr 2024புது டெல்லி, நாங்களும் இட ஒதுக்கீட்டு கொள்கையை தொட மாட்டோம்.
-
அழகர்கோவிலில் சித்திரை திருவிழா தொடக்கம்: அழகர்மலையிலிருந்து மதுரைக்கு இன்று கள்ளழகர் புறப்படுகிறார் : மூன்றுமாவடியில் நாளை எதிர்சேவை
20 Apr 2024மதுரை : மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கிய நிலையில் இன்று (ஏப். 21) மாலை அழகர்மலையிலிருந்து மதுரைக்கு கள்ளழகர் புறப்படுகிறார்.
-
பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைத்தால் தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
20 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சியமைத்தால் வல்லுநர்களுடனான முறையான ஆலோசனைக்குப் பிறகு, தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்களிக்காதவர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
20 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
-
இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு: ராபா நகரில் 9 பேர் உயிரிழப்பு
20 Apr 2024ராபா, காஸா : காஸாவின் தென் பகுதியிலுள்ள நகரான ராஃபா மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கியதில் 6 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
-
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ள, குறைந்த தொகுதிகளின் விவரம்
20 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் வாக்கு பதிவு சதவீதம் அதிகரித்த நிலையில், ஒரு சில தொகுதிகளில் கடந்த தேர்தலை விட குறைவா